PMK protest against the NLC turned violent
வன்முறையாக மாறிய பாமக போராட்டம் போர்க்களமான (NLC) போராட்டம் போலீஸ் தடியடி துப்பாக்கிச் சூடு என்ன நடக்கிறது நெய்வேலியில்..!
பாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்திய முற்றுகை போராட்டம் கலவரமாக மாறியது.
காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கியதால் வன்முறை வெடித்தது போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி வானத்தை நோக்கி துப்பாக்கால் சுட்டதால் பதற்றம் நிலவுகிறது.
நெய்வேலியில் 2வது சுரங்க விரிவாக்க பணிகளை கைவிட வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் வரவழைக்கப்பட்டார்கள் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து அன்புமணி ராமதாஸ் பேசினார்.
பல கோடி ரூபாய் கொடுத்தாலும் நிலத்தை கொடுக்க மாட்டோம் என்று சொன்னார் அன்புமணி ராமதாஸ்.
பின்னர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்எல்சி நிறுவனத்திற்குள் நுழைவதற்கு பாமக பாமகவினர் புறப்பட்டனர் என்எல்சி வாயில் நோக்கி புறப்பட்ட பாமகவினரை.
காவல்துறை தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
அதன் பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினரை காவல்துறையினர் கைது செய்தார்கள்.
அன்புமணியை ஏற்றி சென்ற ஏற்றி சென்ற காவல் வாகனத்தை தடுத்து நிறுத்தி பாமகவினர் தொண்டர்கள் ஈடுபட்டார்கள்.
மேலும் காவல்துறையினர் மீது பாமகவினர் கல் வீசினார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி காவல்துறையினர் தண்ணீர் பீச்சி அடித்தனர் கூட்டத்தை கலைத்தனர்.
வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டனர் இதனால் பதற்றம் நிலவியது தொண்டர்கள் கல்வீச்சு தாக்கியதில் காவல்துறையின் சிலது மண்டை உடைத்தது.
பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால் என்எல்சி நிறுவனத்தின் நுழைவாயில் போர்க்களம் போல காணப்பட்டது.
ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் நெய்வேலியில் கடுமையான பதற்றம் நிலவுகிறது.
பொய்யான வாக்குறுதி அளித்த திமுக
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் ஒரு வாக்குறுதி வெளியிட்டார்.
அதாவது நானும் டெல்டாகாரன் தான் அந்த நிலங்களை பாதுகாப்பேன் என்று அறிவித்தார்.
ஆனால் இன்று விலை நிலங்களில் இயந்திரங்கள் புகுந்து நிலங்களை அழித்து நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதைப்பற்றி வாய் திறக்காத திரு ஸ்டாலின் அவர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார் என தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் மக்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
திரு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் இதைப் பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை,விளைநிலங்கள் அழிக்கப்படுவதை தினம் தோறும் செய்திகள் மூலம் அறிந்து வருகிறோம்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
Morning drinks to lower bad cholesterol
How to change Passport photo in tamil
How to renew your old Passport in online 2023