Pmmvy scheme full details useful tips 2022
கர்ப்பிணி பெண்களுக்கு ரூபாய் 5,000/- அறிவிப்பு பிரதமரின் தாய்மை வந்தன திட்டம்..!
இந்தக் கட்டுரையில் மத்திய அரசு கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கும் உதவித்தொகை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
இந்த திட்டமானது 01.01.2017 அன்று இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டது, இந்த திட்டத்தின் பெயர் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா திட்டம் (PMMVY)என்பது.
பெண்களுக்கு குழந்தை பிறந்த காலத்தில் பயன்கள் தரும் திட்டமாகும் கடந்த 2013ஆம் ஆண்டில் உணவு உறுதிப்பாடு திட்டத்தின்படி நம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அவர்களுடைய முதல் குழந்தைக்கு மூன்று தவணை மூலம் ரூபாய் 5,000/- வழங்கப்படுகிறது.
அதேபோல் தமிழக அரசு வழங்கும் ரூபாய் 18,000/- உதவித்தொகையுடன் இந்த மத்திய அரசு வழங்கும் ரூபாய் 5,000/- உதவித் தொகையும் பெற்றுக் கொள்ளலாம்.
சரி இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் பயன்கள் யாரெல்லாம் இந்த திட்டத்தில் பதிவு செய்யலாம், போன்ற விவரங்களை இப்பொழுது முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன
Pmmvy scheme full details useful tips இந்தியாவில் வாழும் ஏழை எளிய தாய்மார்களின் முதலாவது குழந்தை பெறுவதற்கு முன்னும் குழந்தை பெற்ற பின்னும் போதிய ஓய்வு எடுப்பதற்கும்.
அவர்கள் வேலைக்கு போகாமல் இருப்பதால் அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பை ஓரளவு ஈடுகட்டும் வகையில் மத்திய அரசு நிதி உதவி அளிக்கிறது.
இதனால் கருவுற்ற பெண்களுக்கும் பாலூட்டும் பெண்களுக்கும் ஓரளவு ஆரோக்கியமான நிலை உருவாகிறது.
யாரெல்லாம் இந்தத் திட்டத்தில் இணையலாம்
இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை மத்திய அல்லது மாநில அரசு துறைகளில் பணிபுரியும் நபர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களை தவிர.
மற்ற அனைத்து இந்திய குடிமக்களும் கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இந்த திட்டத்தில் இணைந்து பயனடையலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒரே ஒருமுறை மட்டும் நிதி உதவி பெற முடியும்.
அதேபோல் தவணைகளாக வழங்கப்படும் நிதி உதவி கருக்கலைப்பு குழந்தை இறந்து பிறந்தது காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டால் மீதி உள்ள தவணைகள் அடுத்த குழந்தை பிறப்பின்போது பெற்றுக்கொள்ள முடியும்.
குழந்தை பிறந்து சில காலம் கழித்து துரதிஸ்டவசமாக ஒருவேளை உயிரிழந்து விட்டால் ஒரே ஒரு முறை பயன்பெறும் இந்த திட்டத்தில்.
ஏதாவது தவணைகள் வழங்கப்படாமல் இருந்தால் மட்டும் அடுத்த குழந்தை பிறப்பின்போது நிபந்தனைகளையும், தகுதிகளையும், நிறைவேற்றினால், பெற்றுக்கொள்ள முடியும்.
இதனுடைய பயன்கள் என்ன
மூன்று தவணைகளில் மொத்தம் ரூபாய் 5,000/- வழங்கப்படும் அதாவது கருவுற்ற பெண்கள் அங்கன்வாடி மையம் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்து கொண்டது முதல் தவணையாக ரூபாய் 1,000/- வழங்கப்படும்.
கருவுற்ற காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பரிசோதனைகளில் குறைந்தது ஒரு பரிசோதனைக்காவது வந்தவர்களுக்கு ஆறாவது மாத கர்ப்ப காலத்தின் போது இரண்டாவது தவணையாக ரூபாய் 2,000/-வழங்கப்படும்.
குழந்தை பிறந்த பிறகு அதனைப் பதிவு செய்து BCG,OPV,DPT ஹெப்படிடிஸ் B தடுப்பூசிகளின் முதலாவதுதவணையை போட்ட பிறகு, உதவி தொகை மூன்றாவது தவணையாக ரூபாய் 2,000/- வழங்கப்படும்.
மேலும் இந்த திட்டத்தில் பிரதமரின் தாய்மை வந்தன திட்டத்தின் கீழ் பயன் பெறுபவர்கள் மருத்துவமனைகளில் பிள்ளை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் ஜனனி சுரக்ஷா யோஜனா (JSY) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையான 1,000/- ரூபாயும் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த திட்டத்திற்கு பதிவு செய்யும் முறை
தாய்மை வந்தன திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுள்ளவர்கள் கருவுற்றதும் அங்கன்வாடி மையம் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார மையங்களில் சென்று பதிய வேண்டும்.
இங்கு கொடுக்கப்படும் விண்ணப்பபடிவம் 1-A யில் தங்களுடைய அனைத்து விவரங்களையும் நிரப்பி தேவையான ஆவணங்களுடன் கருவுற்ற பெண் மற்றும் அவருடைய கணவனின் கையொப்பங்களுடன் சம்பந்தப்பட்ட மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
கணவனின் ஆதார் எண், பெண்ணின் வங்கி கணக்கு எண் யாராவது ஒருவருடைய கைபேசி எண் ஆகியவை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.
அதன்பின்பு நிர்ணயிக்கப்பட்ட ஆவணங்களை அங்கன்வாடி மையங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சுகாதார மையங்களில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
மத்திய அரசின் மகளிர் குழந்தைகள் நல அமைச்சகத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் இதற்கு தேவையான ஆவணங்களை.
முதலாவது தவணை நிதி உதவி பெறுவது எப்படி
Pmmvy scheme full details useful tips பதிவிறக்கம் செய்வதற்கு முதலாவது தவணை நிதி உதவி பெறுவதற்கும் தாய்-சேய் பாதுகாப்பு அட்டையின் (MCP card) நகல் பெண் மற்றும் கணவனின் அடையாள சான்று வங்கி கணக்கு அல்லது அஞ்சலக எண் விவரம் ஆகியவற்றோடு படிவம் 1-A பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
இரண்டாவது தவணை நிதி உதவி பெறுவது எப்படி
Pmmvy scheme full details useful tips இரண்டாவது தவணை நிதி உதவி பெற கர்ப்பம்தரித்த ஆறாவது மாதத்தில் தாய் சேய் பாதுகாப்பு படையில் குழந்தை பிறப்பதற்கு முந்தைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு விவரங்களை பகிர்ந்து அதன் நகல் படிவம் 1-B நிரப்பி கொடுக்க வேண்டும்.
மூன்றாவது தவணை நிதி உதவி பெறுவது எப்படி
Pmmvy scheme full details useful tips மூன்றாவது தவணை நிதி உதவியைப் பெற குழந்தையின் பிறப்பினை பதிவு செய்த சான்றின் நகல் குழந்தைக்கு முதலாவது தவணை தடுப்பூசி போட்ட விவரங்கள் கொண்ட தாய் சேய் பாதுகாப்பு அட்டை நகல் ஆகியவற்றுடன் படிவம் 1-C எழுதி தரவேண்டும்.
முக்கிய சில குறிப்புகள்
தாய்மை வந்தன திட்டத்தின்கீழ் பணம் பெற தகுதி இருந்தும் பதிவு செய்யாமல் வீட்டில் இருந்தாலும், நிதி உதவியை பெற வழியுண்டு அப்படி பதிவு செய்யாதவர்கள்.
கருவுற்ற நாளிலிருந்து 9வது மாதத்திற்குள் விண்ணப்பிக்கலாம் இல்லை என்றால் குழந்தை பிறந்த பின்னர் ஓர் ஆண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.