Pooran kadi patti vaithiyam best 3 tips
பூரான் கடிக்கு பாட்டி வைத்திய முறைகள்..!
பூரான் கடிக்கு வீட்டிலேயே எளிமையாக பாட்டி வைத்தியம் மூலம் குணப்படுத்தலாம்.
இது சிறிய உருவமாக இருப்பதால் சந்து பொந்துகளில் எளிமையாக ஓடி ஒளிந்து கொள்கிறது.
இதனால் இதனை கண்டுபிடிப்பது கடினம் என்பதால் சிறிய அளவிலான விஷயம் உடலில் பாய்கிறது.
பொதுவாக வீட்டில் அடசல்கள் அதிகமாக இருந்தால் பூரான்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம், குழந்தைகள் இருக்கும் வீடு எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.
பூரான் கடிக்கு என்ன மாதிரியான பாட்டி வைத்தியம் இருக்கிறது என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.
பூரான் கடித்தால் உடனடியாக இயற்கை வைத்தியத்தை வீட்டிலேயே செய்யலாம் இந்த மருந்து எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
பூரான் கடித்தால் முதலில் என்ன செய்ய வேண்டும்
பூரான் கடித்து விட்டால் முதலில் பயப்படாமல், பதட்டப்படாமல், மன அழுத்தம், இல்லாமல் நீங்கள் இருக்க வேண்டும்.
என்றால் பதட்டத்தோடு மன அழுத்தத்தோடு இருந்தால் உடலில் திடீரென்று ரத்த அழுத்தம் அதிகமாகி விடும், இதனால் உடல் முழுவதும் விஷம் அதிகமாக பரவத் தொடங்கிவிடும்.
உடனே வீட்டில் உள்ள மிளகு, வெற்றிலை, சுண்ணாம்பு, போன்ற பொருட்கள் இருந்தால் அதை வைத்து எளிமையாக சிகிச்சையைத் தொடங்கி விடலாம்.
சுண்ணாம்பு மருத்துவ பயன்பாடுகள்
பூரான் கடித்த உடன் சுண்ணாம்பை எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்தவுடன் கடித்த இடத்தில் தடவ வேண்டும்.
இந்த சுண்ணாம்பு தடவுவதன் மூலம் விஷக்கடி முழுவதும் உறிஞ்சிவிடும்.
சுண்ணாம்பை பூரான் கடிக்கு மட்டுமில்லாமல் பல வகையான விஷக்கடிகளுக்கும் கிராமங்களில் பயன்படுத்துகிறார்கள்.
வெற்றிலை மருத்துவ பயன்பாடுகள்
Pooran kadi patti vaithiyam best 3 tips வெற்றிலை எடுத்துக்கொண்டு காம்பையும் கீழிருக்கும் நுனியையும் நீக்கிவிட்டு அந்த வெற்றிலையில் 15 மிளகுகளை வைத்து நன்றாக மடித்து சாப்பிடவேண்டும்.
தேங்காய் இல்லாதவர்கள் இந்த மருந்தை எடுத்துக்கொண்டால் விஷக்கடி நீங்கிவிடும்.
மிளகு வெற்றிலை சாப்பிடுவதால் விஷத்தை வேகமாக முறியடிக்கக் கூடிய தன்மை அதிகமாக இருக்கிறது,இதை நம் முன்னோர்கள் பழங்காலத்தில் பயன்படுத்தியுள்ளார்கள்.
தேங்காய் பயன்பாடுகள்
Pooran kadi patti vaithiyam best 3 tips பூரான் கடித்த உடன் வீட்டில் தேங்காய் எடுத்துக்கொண்டு அதை உடைத்து அதில் ஒரு பகுதியை பச்சையாக உடனடியாக சாப்பிட்டு வந்தால் பூரான் கடித்த விஷக்கடி முடிந்துவிடும்.