Pradhan Mantri Awas Yojana useful tips 2022
முடிந்துபோன பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மத்திய அரசு முக்கிய அறிவிப்பை அறிவித்தது..!
மத்திய அரசு நம் நாட்டில் கொண்டு வந்த திட்டங்களில் அனைத்து தரப்பு மக்களும் வரவேற்று ஒரு திட்டம் என்றால் அதுதான் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டம்.
இந்த திட்டத்தை தற்போது டிசம்பர் 2024 வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது..!
இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கோரிக்கையின் அடிப்படையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் டிசம்பர் 31 2024 வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே இந்த திட்டத்தின் காலக்கெடு 2022 மார்ச் மாதம் வரை இருந்த நிலையில் தற்போது, மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்றால் என்ன
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டம் என்பது தகுதியான இந்திய நகர்ப்புற மக்களுக்கு குறைந்த விலையில் வீடுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட சிறந்த திட்டமாகும்.
அனைவருக்கும் வீடு என்ற தமிழில் கூறப்படும் இந்த திட்டத்தில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் உள்ள பொதுமக்கள் பயன் அடைந்துள்ளார்கள்.
இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன
ஏழை எளிய மக்களுக்கு மானியத்துடன் வீடு வழங்கும் இந்த திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
2022 மார்ச் 31-ஆம் தேதிக்குள் இந்தியாவில் சுமார் 2 கோடி வீடுகள் கட்டி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என உருவாக்கப்பட்டது.
எவ்வளவு மானிய வட்டியில் பணம் கொடுக்கப்படுகிறது
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் சிறப்பம்சங்கள் 20 ஆண்டுகள் வரை தவணைகள் அத்துடன் பயனாளிகள் வீடு கட்டுவதற்கு கடன் வாங்கிக்கொள்ளலாம்.
இதற்கு வரும் 6.5 சதவீதம் வட்டி மானியம் உண்டு, ஆனால் ஒவ்வொருவரின் வருமானத்திற்கு ஏற்றபடி மானியம் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இலக்காக 100 லட்சம் வீடுகள் நிர்ணயிக்கப்பட்டது
2017ஆம் ஆண்டில் இலக்காக 100 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிட்ட நிலையில் இவற்றில் 60 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
சுமார் 40 லட்சம் வீடுகள் கட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்காளால் தாமதமாகி வருவதால் அவற்றை விரைந்து முடிக்க.
இன்னும் இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது, இந்த திட்டத்திற்கான காலம் தற்போது மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மானியம் தொகை எவ்வளவு
Pradhan Mantri Awas Yojana useful tips 2022 மத்திய அரசின் இந்த திட்டத்திற்காக கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ரூபாய் 2.03 லட்சம் கோடியும் மார்ச் 31 2022 வரை மத்திய அரசின் மானியம் 1,18,020.46 கோடி ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும்.
85,046 கோடி இன்னும் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு
Pradhan Mantri Awas Yojana useful tips 2022 இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைதளம் ஒதுக்கப்படும் என்பதே இந்த திட்டத்தின் சிறப்பம்சங்களில் முக்கியமாகும்.
தமிழகத்தில் இந்த திட்டத்தின் நிலை என்ன
Pradhan Mantri Awas Yojana useful tips 2022 இதுவரை இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 7 லட்சத்து 65க்கு அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திராவில் இந்த திட்டத்தின் கீழ் 20 லட்சத்திற்கு அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
ஆந்திராவை அடுத்து உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆகிய மாநிலங்கள் உள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது இந்த பட்டியலில் தமிழ்நாடு 5வது இடத்தில் உள்ளது.
இந்த திட்டத்திற்கான தகுதிகள் என்ன
Pradhan Mantri Awas Yojana useful tips 2022 இந்த திட்டத்தில் வீடு பெறுவதற்கு தகுதி என்பது ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி திருமணமாகாத மகள் அல்லது திருமணமாகாத மகன்கள் இருக்க வேண்டும் என்றும்.
ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் 3 லட்சம் முதல் 6 லட்சம் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.