RBI Plan New bring 2 digital currency in india
2 புதிய டிஜிட்டல் கரன்சி உருவாக்கும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா எதற்கு தெரியுமா..!
இந்தியாவில் பணப்புழக்கத்தை முழுவதுமாக மாற்றப்போகும் டிஜிட்டல் கரன்சியை உருவாக்க உள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட.
நிலையில் தற்போது புதிய மாற்றத்தை மேலும் கொண்டுவர முடிவு செய்துள்ளது ரிசர்வ் வங்கி.
இந்திய ரிசர்வ் வங்கி உலக நாடுகளுக்கு இணையாக ரூபாய் மதிப்பில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில்.
தற்போது சில்லறை வர்த்தகம் மற்றும் ஹோல்சேல் கணக்குகளுக்கு தனித்தனி டிஜிட்டல் கரன்சி உருவாக்க முடிவு செய்துள்ளது.
இதில் எந்த கரன்சி முதலில் தயாராகிறது அதை முதலில் சோதனை செய்ய முடிவு செய்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் டி ராபி ரவிசங்கர் கூறுகையில் மொத்தமாக விற்பனை சந்தைக்கான டிஜிட்டல் கரன்சி பணிகள் கிட்டத்தட்ட முடிந்தது.
ஆனால் சில்லறை வர்த்தகம் செய்ய உருவாக்குவது சற்று கடினமாக இருக்கும் காரணத்தால் கூடுதல் காலம் தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் மோசடிகள்
மத்திய வங்கியின் டிஜிட்டல் கரன்சி என்பது காகிதத்தில் இருக்கும் ரூபாயை டிஜிட்டல் முறையில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது புதிய முறை தான்.
இதில் டிஜிட்டல் மோசடி செய்ய அதிக வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் அனைத்து பிரச்சனைகளையும் ஒரே தளத்தில் உருவாக்க வேண்டியது மிகவும் முக்கியமானது என ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் தெரிவிக்கிறார்.
எப்படி பணப்புழக்கத்தில் கள்ள ரூபாய் நோட்டுக்கள் பயன்பாட்டில் இருக்கிறதோ, டிஜிடல் கரன்சியில் பல மோசடிகள் நடக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
இதை தடுக்கும் வகையில் (firewall) உருவாக்க வேண்டுமென ரிசர்வ் வங்கியின் கவர்னர் தெரிவித்துள்ளார்.
காகித நாணயங்கள்
இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வருவது மூலம் காகித நாணயங்களை மக்கள் நம்பியிருக்கும் கட்டாயம் தேவை இல்லை.
பரிமாற்றக் கட்டணம் குறைவாக இருக்கும் காரணத்தால் மத்திய அரசிடம் அதிகமான செட்டில்மெண்ட் ரிக்ஸ் பெரிய அளவில் குறைந்து விடும்.
கருப்பு பணம் வரி ஏய்ப்பு
அனைத்திற்கும் மேலாக பணப்புழக்கத்தை முறையாகக் கண்காணிக்க முடியும் பண திருட்டு அளவுகள் பெருமளவு குறைந்துவிடும்.
பாகப்பிரிவினை சட்டம் பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்..!
கருப்பு பணம் உருவாக்குவதே குறைக்க முடியும், அதேவேளையில் வரிஏய்ப்பு அளவை பெருமளவில் கண்டுபிடித்துவிடலாம்.
இந்த டிஜிட்டல் கரன்சியில் பல ஆபத்துகள் இருந்தாலும் அரசுக்கு இதனால் மிகப்பெரிய நன்மை அமையவுள்ளது.
Paywave ATM card safety full details 2022
வரி ஏய்ப்புக்கள், பணம் மோசடி, கள்ள நோட்டு, பணம் பதுக்கி வைத்தல், உள்ளிட்டவை முற்றிலும் குறைப்பதற்கு இந்த டிஜிட்டல் கரன்சி விரைவாக அறிமுகம் செய்ய உள்ளது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா.