செல்வந்தர்களின் 5 ரகசிய திட்டங்கள் இதை தெரிந்து கொண்டால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்.!!!(Rich people 5 amazing plans to life )
இந்த உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவாக ஒரு ஆசை இருக்கும் அது பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிப்பாக 0.3% நபர்கள் மட்டுமே காலம் காலமாக பணக்காரர்களாக வாழ்வார்கள் அவர்களுடைய ரகசியங்களை வெளியில் எப்பொழுதும் சொல்ல மாட்டார்கள்.
பல பணக்காரர்கள் தங்கள் எப்படி பணத்தை சம்பாதிக்கிறோம் என்பதை புத்தகம் மூலம் வெளியிடுவார்கள் அவர்களுடைய புத்தகங்களை படிக்கும்போது சுவாரசியமாக இருக்கும்.
எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமில்லை அதை எப்படி சரியான வழியில் பயன்படுத்துகிறோம் என்பது மட்டுமே இங்கு முக்கியம் அதை தெரிந்து கொண்டால் நீங்களும் பணக்காரர் ஆகலாம்.
இந்த கட்டுரையில் பணத்தை சம்பாதிப்பதற்கு செல்வந்தர்கள் பயன்படுத்தும் 5 ரகசியங்களை பார்ப்போம்.
காலத்திற்கேற்ப முதலீடு.
பெரும்பாலான செல்வந்தர்கள் பணத்தை ஈட்ட பணம் தேவைப்படுகிறது என்று உணர்கிறார்கள் அவர்கள் கூட்டு வட்டியின் அருமையை உணர்ந்து இருக்கின்றனர் எப்படி புத்திசாலியான முதலீடுகளை செய்வது என்று ஆய்வு செய்கின்றனர்.
பணம் சம்பாதிக்கும் போது சில நபர்கள் உடல் நலத்தினை கண்டுகொள்வதில்லை ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு மிகப்பெரிய செலவுகள் ஏற்படும் முதலில் இதை தடுப்பதற்கான ஒரு புத்திசாலித்தனமான யோசனையை நீங்கள் கையாள வேண்டும்.
உங்களுடைய மிகப்பெரிய சொத்து உங்களுடைய அறிவு அனுபவம் மட்டுமே அதை தினமும் வளர்த்துக் கொள்வதற்கு குறைந்த பட்சம் 2 மணி நேரம் ஒதுக்க வேண்டும்.
முதலீடு செய்வது, வர்த்தகத்தை தூக்குவது, சரியான பங்குகளை கண்டறிவது, என பல பயனுள்ள செயல்களைச் செய்ய நீங்கள் தயாராக இருக்க வேண்டும். வாய்ப்புகளுக்காக காத்திருக்கக் கூடாது புதிய வாய்ப்புகளை நீங்களாகவே உருவாக்க வேண்டும்.
உங்கள் இலக்கின் மீது கவனம் ஒழுக்கம் தேவை.
நீங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டால் அதற்கு ஒழுக்கம் தேவை ஒரு இலக்கை நிர்ணயிக்கும் பொழுது அதை பின்தொடர்ந்து செல்வதற்கான ஒரு உத்வேகம் தேவை. அதாவது முக்கியமில்லாத செயல்களில் உங்கள் கவனம் சிதறக் கூடாது குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தை சம்பாதிக்க மாதம் ஒரு தொகையை சேமிக்க நினைத்தால் அதை செய்யுங்கள். நீங்கள் செலவுகளை குறைக்க வேண்டும் அல்லது வருமானத்தை அதிகரிக்க வேண்டும் இது கஷ்டமாக என்றாலும் பணக்காரர்கள் இதை சரியாக செய்கிறார்கள்.
முழு ஈடுபாடுடன் உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.
சில நேரங்களில் உடல் உழைப்பு அதிக நேரம் செய்ய வேண்டிய சூழ்நிலைகள் இருக்கும் நீங்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தாள் இரவு அதிக நேரம் உங்கள் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும். இதற்கு செல்வந்தர்கள் எப்பொழுதும் தயாராக இருப்பார்கள் தனக்குப் பிடிக்காத வேலையை செய்ய வேண்டியிருந்தாலும் கூட ரிஸ்க் எடுத்து செய்ய தயாராக இருப்பார்கள்.
உங்களுடைய நாள் துவங்கும் பொழுது முதலில் நீங்கள் உங்களுடைய நிதி நிலைமையை பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும். பணம் சம்பாதியுங்கள், அதை சேமியுங்கள், முதலீடு செய்யுங்கள், இவற்றைத் தொடர்ந்து செய்யுங்கள் இதுவே செல்வந்தர்களின் மனநிலை.
இதன் பிறகு எல்லாம் தானாக நடக்கும் இதற்கு சில ஆண்டுகளானாலும் காத்திருக்க வேண்டும் இதை விவரிப்பது எளிது தான் ஆனால் நடைமுறைப்படுத்துவது கஷ்டமாக இருக்கலாம் ஒரே நாளில் நீங்கள் பணக்காரர் ஆக முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள் அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக நாட்களை நீங்கள் கடந்து செல்ல வேண்டும்.
சரியான வழியில் சிக்கனமாக இருத்தல்.
இந்த உலகில் உள்ள எல்லா செல்வந்தர்களும் சிக்கனவாதிகள் இல்லை எனினும் சுயமாக சம்பாதித்து செல்வந்தர்களாக ஆனவர்கள் ஏதேனும் ஒரு வகையில் சிக்கனமாக இருப்பார்கள். வாரன் பஃபெட் போன்ற பணக்காரர்கள் இன்னுமும் சிக்கனமாக வாழ பழகிக் கொண்டுள்ளார்கள். இதன்பொருள் எப்பொழுதும் மலிவான பொருட்களை வாங்குவது இல்லை சிறந்த மதிப்பெண் பெறுவதற்கு உங்களுக்கு தேவையில்லாத பொருட்கள் மீது செலவு செய்யாமல் இருப்பதுதான். சிக்கனத்தை கடைபிடிப்பது உங்கள் பணத்திற்கு எதிர்காலம் நன்றாக இருக்கும்
வேளாண் சார்ந்த துறைகளில் அதிக லாபம் தரக்கூடிய சிறு தொழில்கள்.
தன்னம்பிக்கை தேவை.
செல்வந்தர்களிடம் உரையாடும்போது குறிப்பாக சுயமாக பணம் சம்பாதித்து உயர்ந்த நபர்களிடம் பேசும்பொழுது அவர்களிடம் தன்னம்பிக்கையை வெளிப்படுவதை பார்க்கலாம். தவறுகள் நிகழும்போது அதன் சாதகமான பக்கத்தை பார்த்து பாடம் கற்றுக் கொண்டு முன்னேறி செல்ல வேண்டும் என்பதே பெரும்பாலான செல்வந்தர்கள் தெரிந்திருப்பார்கள்.
நம்பிக்கைக் கீற்று அதிகரிக்கும் வகையில் அவர்களுடைய செயல்கள் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.twitter