Senthil Balaji bail hearing is going on today
செந்தில் பாலாஜிக்கு அறிவிக்கப்பட்ட நல்ல செய்தி இன்று ஜாமினில் வெளிவர வாய்ப்புகள் அதிகம்?முக்கிய விசாரணை இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது..!
ஊழல் புகாரில் பண மோசடியில் இரண்டு மாதத்திற்கு மேலாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது தரப்பு மனு தாக்கல் செய்து உள்ளது.
அந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.
சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்பு சட்ட வழக்கில் அமலாக்க துறையால் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்ற பத்திரிக்கையும் அதிகாரப்பூர்வ ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் MP,MLAs க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மனுவை தான் விசாரிக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று வருமாறு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைத்த மூத்த வழக்கறிஞர்.
என் ஆர் இளங்கோ நீதிபதிகள் எம் சுந்தர்,சக்திவேல் அமர்வில் முறையிட்டார் அப்போது இந்த வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் என நீதிபதி தெரிவித்தார்.
இது தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடுங்கள் என அறிவுறுத்தியினார்,இதனுடைய வழக்கு தொடர்பாக நீதிபதி ஆர் சுரேஷ் குமார் தலைமையில் அமர்வில் செந்தில் பாலாஜி தரப்பில் முறையிட்டது.
வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தில் தொடங்கியது
சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்டார் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி.
அப்பாவி ஏழை எளிய மக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அவருக்கு எதிராக வலுவான குற்றச்சாட்டுகள் இருக்கிறது.
இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் திராவிட மாடலுக்கு உச்சநீதிமன்ற கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி மீதான விசாரணையே தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
வருமானவரித்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் மற்றும் நண்பர் வீட்டில் சாதனை நடத்தியது.
அதில் வருமானவரித்துறை அலுவலர்கள் தாக்கப்பட்டார்கள் அவர்கள் பயன்படுத்திய வாகனம் சேதப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் வருமான வரித்துறை சோதனை நடத்தி இத்தகைய தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது இதுவே முதன்முறை.
தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவர் மருத்துவமனையில் ஓய்வில் இருந்தார்,அவர் மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு தற்போது மாற்றப்பட்டு அங்கு இருக்கிறார்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
1000/- ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம்..!
How to get back money UPI Payment Money Failed