Tamil Nadu peyar karanam best tips 2023
தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்கு என்ன காரணம் அதற்காக நடைபெற்ற போராட்டங்கள் என்ன..!
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்கு முன்பு தமிழ்நாட்டில் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, பல்லவ நாடு, என தனித்தனியே மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் நாடுகளில் இருந்தது.
ஆனாலும் தமிழ் மொழி என்பது உயிர் மொழியாக இருந்தது, ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி கொண்டுவரப்பட்டது.
ஆனாலும் தமிழ்நாட்டில் இடைவிடாத போராட்டங்கள், நடைபெற்றுக் கொண்டிருந்தன, காரணம் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் வைக்க வேண்டும்.
அதற்காக நடைபெற்ற போராட்டங்களும், உயிர் தியாகங்களும், பற்றி இந்த கட்டுரையில் முழுமையாகப் பார்க்கலாம்.
தமிழ்நாடு என பெயர் வைப்பதற்கு என்ன முக்கிய காரணம்
சுதந்திரத்திற்கு பின்பு தென்னிந்தியாவில் மெட்ராஸ் மாகாணம் மிகப்பெரிய மாகாணமாக இருந்தது குறிப்பாக மெட்ராஸ் மாகாணத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், என பல மொழிகளில் பேசும் மக்கள் அதிகமாக இருந்தார்கள்.
இதனால் மொழிகளைக் கொண்டு தனித்தனியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது அப்போது தமிழ்நாடு என்ற பெயருக்கு பதில் மெட்ராஸ் ஸ்டேட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அப்போது மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை நீக்கிவிட்டு தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று கண்டன் சங்கரலிங்கனார் அவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
என்னென்ன போராட்டங்கள் நடைபெற்றது
Tamil Nadu peyar karanam best tips 2023 மதராசு மாநிலம் மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட நிலையில் அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் தமிழ்நாடு என பெயர் வைக்க வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய போராட்டங்கள் ஏற்பட்டது.
அந்தப் போராட்டத்தில் கண்டன் சங்கரலிங்கனார் அவர்கள் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருந்தார், பலரும் அவருடைய உண்ணாவிரதத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
Tamil Nadu peyar karanam best tips 2023 இருந்தாலும் அவர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டால் தொடர்ந்து 76 நாட்கள் தனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்தார்.
1956-ஆம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி அவர் உயிரிழந்தார் தமிழ்நாடு என்ற பெயர் சூட்ட வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் பல இயக்கங்களின் மூலம் மத்திய அரசுக்கு பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு.
அந்த கோரிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி முன்னுக்கு வர தொடங்கியது.
தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்ட நாள் வருடம்
1962ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கு தனி மசோதா கொண்டு வரப்பட்டது பின்பு அவை தள்ளுபடி செய்யப்பட்டது.
Tamil Nadu peyar karanam best tips 2023 அதன் பின்பு 1964ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சட்டப்பேரவையில் தமிழ்நாடு என்ற பெயரை மெட்ராஸ் மாநிலத்துக்கு சுட்டத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது அவையும் நிறைவேறாமல் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதன்பிறகு அறிஞர் அண்ணா தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு 1967 ஆம் ஆண்டில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை தமிழ்நாடு அரசு ஆக மாறியது.
அதனைத் தொடர்ந்து 1968ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானங்கள் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.
அதன் பிறகு 1963 நவம்பர் 23 ஆம் நாள் தமிழ்நாடு பெயர் மாற்றம் நாடாளுமன்ற மசோதாவில் தீர்மானம் நிறைவேறியது, அதனைத் தொடர்ந்து 1969ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி சென்னை மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது.