ரூ 50,000 ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை….!(Tamilnadu Government jobs 2020 for 10th pass)
தமிழக அரசு பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அவ்வப்போது அறிவிப்புகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சார்பில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இதன் அடிப்படையில் இன்று வெளிவந்த செய்தியில் விருதுநகர் மாவட்டம் கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்ல் காலியாக உள்ள செயலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. அடிப்படைக் கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பிக்கலாம்.
நிர்வாகம்: விருதுநகர் மாவட்ட கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்
மேலாண்மை: தமிழக அரசு
பணி பதவி: செயலாளர்
பணியிடம் விருதுநகர்: மாவட்டம்
வயது வரம்பு: அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது விண்ணப்பதாரர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்
ஊதியம்: ரூ 15,900 முதல் ரூ 50,400 வரை
விண்ணப்பதாரர்களின் கவனத்திற்கு:
அரசு விதிமுறைகளின்படி வயது, வரம்பு, கல்வித்தகுதி, விண்ணப்ப கட்டணம், சலுகைகள், ஆகிய வகைகள் மாறுபடுவதால். விண்ணப்பதாரர்கள் இப்பணியை பற்றி நன்கு அறிந்து கொள்வது நல்லது.
இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய சான்றுகளை இணைந்து சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்தில் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5:45 வரை சமர்ப்பிக்க வேண்டும். 16/10/2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
How to remove the corneas under the eyes
தேர்வு முறைகள்: அரசு விதிமுறைகளின்படி தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்.பணியிடம் குறித்து மேலும் விவரங்களை https://virudhunagar.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
பல்வேறு பஞ்சாயத்து அலுவலகத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பபடுவதால் கவனமாக முகவரி மற்றும் வயது தகுதி, கல்வித்தகுதி போன்றவைகளை தெரிந்து கொள்வது நன்று.
விண்ணப்பப் படிவம் பெற: இங்கே கிளிக் செய்யவும்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் தபால் மூலம் அனுப்பப்பட்டது அதற்கான படிவத்தை நகல் எடுத்து வைத்துக் கொள்வது எதிர்காலத்திற்கு நல்லது.twitter