Thagaval ariyum urimai sattam useful tips 2022
தகவல் அறியும் உரிமை சட்டம் என்றால் என்ன?
தகவல் அறியும் உரிமை சட்டம் என்றால் என்ன அதை ஏன் அடிக்கடி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
அரசாங்க துறை அல்லது அரசின் உதவி பெற்றுக் கொண்டிருக்கும் தனியார் நிறுவனங்களில் உள்ள தகவல்களை ஒவ்வொரு இந்திய குடிமகனும்.
தேவையான அளவிற்கு தெரிந்து கொள்வதற்கு, உரிமை அளிப்பது தான் தகவல் அறியும் உரிமை சட்டம்.
இப்பொழுது இந்த சட்டம் எதற்கு பயன்படுத்தப்படுகிறது, என்பதை முழுமையாகப் பார்க்கலாம்.
தகவல் அறியும் உரிமை சட்டம் என்றால் என்ன?
அக்டோபர் மாதம் 12ஆம் தேதி கடந்த 2005ஆம் ஆண்டு இந்த சட்டம் நாடு நம் நாட்டில் இயற்றப்பட்ட.
2002 வரை இது தகவல் சுதந்திர சட்டமாக இருந்தது.
இந்த சட்டம் ஜம்மு-காஷ்மீருக்கு இப்பொழுது நடைமுறையில் உள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஒருவர் தங்களுக்கு எந்தத் துறையின் மீது அரசு இயற்றியுள்ள சட்ட திட்டங்களில் சந்தேகம் இருந்தால்.
அது எந்தத் துறையின் கீழ் வருகிறது என்பதை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம், அந்தத் துறை உங்களுக்கு 30 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் கட்டாயம்.
தெரிவிக்க வேண்டிய கால அவகாசம் என்ன
தனி மனிதனின் உயிர் அல்லது தனி உரிமை தகவல்கள் மூலம் கேட்டால், அதற்கு அந்த துறை 48 மணி நேரத்திற்குள் கட்டாயம் பதிலளிக்க வேண்டும்.
தங்களுடைய கோரிக்கை துணை பொது தகவல் அதிகாரிகளிடம் கேட்கப்பட்டால், அதற்கு அவர்கள் அதிகபட்சமாக 35 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.
மூன்றாவது மனிதன் தலையீட்டின் போது கேட்கப்படும் தகவல்களை அதிகபட்சமாக 40 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும்.
ஒரு நபரின் மீது இருக்கும் வழக்குகள் பற்றிய தகவல்களை பட்டியலிடப்பட்ட அல்லது புலனாய்வு நிறுவனங்களிடம் இருந்து மனித உரிமை மீறல் தொடர்பான.
சில தகவல்களை பெற முடியும், அதற்கு அந்த துறை 45 நாட்கள் எடுத்துக்கொள்ளும் பதிலளிப்பதற்கு.
என்ன மாதிரியான தகவல்களை பெற முடியும்
மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்துள்ள அறிவிப்புகள், ஆவணங்கள், பதிவுகள், பத்திரிக்கை அறிக்கை, அரசு ஆணை, அசையும் சொத்து, அசையா சொத்து, வங்கி விவரங்கள், மேலும் சில தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள முடியும்.
ஆட்சித் துறை, நீதித்துறை, நாடாளுமன்றம், சட்டமன்றம், மாநில சட்டமன்றம், அமைப்பின் அரசாங்க ஆவணங்கள், அரசாங்கத்தில் நேரிடையான நிதி உதவி பெறுபவர்கள், அல்லது மறைமுகமாக நிதி உதவி பெறும் நபர்கள்.
இந்த துறை பற்றி சந்தேகம் இருந்தால், இந்த சட்டத்தின் மூலம் தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
விண்ணப்பம் பற்றிய முழு தகவல்கள்
Thagaval ariyum urimai sattam மக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை தெரிந்துகொள்ள, பொது தகவல் ஆணையருக்கு விண்ணப்பிக்கும்போது 10 ரூபாய் செலுத்தி அனுப்பி வைக்கவேண்டும்.
மக்கள் தங்களுக்கு தேவையான தகவல்கள் ஒரு மாதமாகியும் அல்லது சரியான கால நேரத்தில் வரவில்லை எனில், மத்திய தகவல் ஆணையத்தை (CIC) நேரடியாக அணுகலாம்.
இதற்கு தேவையான எந்த ஒரு விண்ணப்பமும் இல்லை, உங்களுடைய பெயர், முகவரி, எதைப் பற்றி தகவல் போன்ற விவரங்களை உள்ள விண்ணப்பம் போதுமானது.
மக்கள் இணையதளம் மூலமும் விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கான வசதிகளை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது (RtiOnline.gov.in).
தகவல் பெற முடியாத சில அமைப்புகள்
Thagaval ariyum urimai sattam 8வது பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள முக்கியமான 11 விவரங்களை கொடுக்காமல் அலுவலர் மறுக்க முடிவு செய்வதற்கு அதிகாரம் இருக்கிறது.
வெளிநாட்டு அரசாங்கத்தின் தகவல்கள்
நம் நாட்டினுடைய போர்த்திறன், ராணுவ திறன், பாதுகாப்பு பற்றிய, தகவல்களை அறிந்துகொள்ள முடியாது.
சட்டமன்றத்தின் சிறப்பு உரிமை மீறல் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள முடியாது.
பொருளாதாரம் மற்றும் அறிவியல் தகவல்களை நாட்டை பற்றி தெரிந்து கொள்ள முடியாது.
இந்த சட்டத்தை யார் நிர்வாகம் செய்வது
Thagaval ariyum urimai sattam தலைமை தகவல் ஆணையர் இவருடைய பதவிக்காலம் குறைந்தது 5 வருடம் மட்டுமே, இவர் தலைமை தேர்தல் ஆணையருக்கு நிகரான அதிகாரம் இருக்கும்.
குடியரசுத் தலைவரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள மத்திய தகவல் ஆணையர்.
மத்திய தகவல் ஆணையர் மற்றும் மாநில தகவல் ஆணையர்.
ஆளுநர் நேரடியாக கட்டுப்பாட்டில் உள்ள பொது தகவல் அதிகாரி, அலுவலகம் இவர்கள் எல்லோரும் இந்த சட்டத்தை நிர்வகிக்கும் அமைப்புகளாக இருக்கிறார்கள்.
இந்த சட்டத்தில் உள்ள அதிகாரிகளை தேர்ந்தெடுப்பது எப்படி
மாநில அளவில் உள்ள தகவல் அதிகாரிகளை தேர்ந்தெடுப்பது முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவ,ர் முதலமைச்சரால் தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சரவை மந்திரி.
மத்திய அளவில் உள்ள தகவல் அதிகாரிகளை தேர்ந்தெடுப்பது பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சரவை அதிகாரி போன்ற நபர்கள்.