Thandrikai powder amazing 5 uses in tamil
தான்றிக்காய் பொடி பயன்கள் என்ன..!
தான்றிக்காய் பொதுவாக ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது உடலில் ஏற்படும் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு அளிக்கிறது.
இதன் காரணமாகவே பாட்டி வைத்தியம், சித்த வைத்தியம், நாட்டு வைத்தியம், போன்றவற்றில் இதனை அதிக அளவு பயன் படுத்துகிறார்கள்.
தொடர்ந்து 48 நாட்கள் இந்த தான்றிக்காயை சாப்பிடுவதன் மூலம் உடல் காயகல்பமாகும் இந்தப் பதிவில் இதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
முடி வளர
தொடர்ந்து தான்றிக்காய் பொடி சாப்பிடுவதன் மூலம் தலைமுடி நன்கு புத்துணர்ச்சியுடன் வளரும், முடிகளை நன்கு வளர செய்யும், முடியின் அடர்த்தி அதிகமாகும், முடி உதிர்வு பிரச்சினை குறையும், குறிப்பாக தான்றிக்காய் தலை முடிக்கு நன்கு ஊட்டம் அளிக்கும்.
தொண்டை கரகரப்பு சரியாக
தொண்டை கரகரப்புக்கு தான்றிக்காய் சிறந்த மருந்தாகும் தான்றிக்காய் குரல் வளத்தை பெருக்கவும் ஆஸ்துமா மற்றும் இரத்தத்துடன் கலந்து வரும் சளி.
சாதாரண சளி இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் தான்றிக்காய் வாய்துர்நாற்றம் நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இரத்த மூலம் குணமாக
ரத்தம் மூலம் நோய் உள்ளவர்கள் தான்றிக்காயைக் கொட்டையை நீக்கி, தோல் கருகி விடாமல், லேசாக வறுத்து பொடி செய்து, 1 கிராம் அளவு தான்றிக்காய் பொடியுடன்.
சிறிதளவு சர்க்கரை, ஒரு டம்ளர் மோருடன் கலந்து, காலை, மாலை, இரண்டு வேளை சாப்பிட வேண்டும், இவ்வாறு சாப்பிடுவதினால் ரத்த மூலம் முற்றிலும் குணமாகும்.
கண் பார்வை தெளிவு பெற
கண்பார்வை நன்கு தெளிவு பெற தான்றிக்காய் பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு டம்ளர் நீரில் கலந்து காலை மாலை என இரண்டு வாரங்கள் அருந்தி வர கண் பார்வை நன்கு தெளிவு பெறும்.
பல்வலி குணமாக
பல் வலியால் அவஸ்தைப்படுபவர்கள் தான்றிக்காயைச் சுட்டு மேல் உள்ள தோல் பகுதியை பொடி செய்து கொள்ளுங்கள், அந்த பொடியை சமமாக சர்க்கரை கலந்து.
தினமும் காலை வெந்நீரை கலந்து அருந்தி வந்தால் பல் வலி மற்றும் பல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.
அல்லது மற்றொரு தீர்வு
Thandrikai powder கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், பொடி சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் ஈறுகளில் பலப்படுத்தப்படும்.