Theft of 50,000 money through the Internet

Theft of 50,000 money through the Internet

QR கோடு மூலம் மிகப்பெரிய மோசடி நடந்து கொண்டு இருக்கிறது சூதானமாக இருங்கள் மக்களே..!

இந்திய மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இணையதள தகவல் திருட்டு, திருட்டு பண மோசடிகள், அதிகமாகி வரும் வேலையில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து கொண்டுவரும் QR பேமெண்ட் தளத்தில் அதிகம் கேள்விப்படாத வகையில் ஒரு புதிய மோசடி இப்பொழுது நடந்துள்ளது.

இதன் மூலம் இனி QR கோடு பயன்படுத்தி பணத்தை நீங்கள் வேறு ஒரு நபருக்கு அனுப்பினாலோ ,கடைக்கு அனுப்பினாலோ அல்லது பெற்றாலும் ஒருமுறைக்கு இருமுறை மிகவும் ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டிய அவசிய சூழ்நிலை எழுந்துள்ளது.

சமீபத்தில் நடந்த ஒரு மோசடியில் ஒரு பெண் சுமார் 50,000/-ரூபாய் தொகையை இழந்துள்ளார்.

Theft of 50,000 money through the Internet

டிஜிட்டல் சேவை

இந்தியாவில் பெரும்பாலும் அனைத்து சேவைகளுக்கும் டிஜிட்டல் சேவை இப்பொழுது வந்துள்ளது, இதன் மூலம் மக்களின் வாழ்க்கை முறையை மிகவும் எளிதாக ஒன்றாக மாறியுள்ளது.

இதேவேளையில் டிஜிட்டல் பேமெண்ட் சேவையும் டிஜிட்டல் சேவைகளில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது.

OLX இணையதளம்

இந்த நிலையில் ஒரு பெண் OLX தளத்தில் தனது பழைய பர்னிச்சர் பொருட்களை விற்பனை செய்வதாக விளம்பரம் அறிவித்துள்ளார்.

அந்த விளம்பரத்தை பார்த்து ஒருவர் பர்னிச்சர் வாங்குவதாக கூறிவிட்டு வாட்ஸ் அப் தளத்தில் பேமெண்ட் மற்றும் இதர விஷயத்தைப் பற்றி பேசி உள்ளார்கள்.

QR கோடு மோசடிகள்

இந்தநிலையில் பொருளை வாங்குவதாக சிறிய அட்வான்ஸ் தொகை கொடுப்பதாகவும் அதற்கு QR கோடு கொண்ட புகைப்படத்தை Receive money check என்ற சொற்களுடன் வாட்ஸ்-அப்பில் அனுப்பியுள்ளான் இதை அந்த பெண் கிளிக் செய்தவுடன் UPI பின் கேட்டுள்ளது.

உடனே அந்தப் பெண் தனது வங்கிக் கணக்கு பேலன்ஸ் காட்டவே UPI கேட்கப்படுகிறது என்று நினைத்துக் கொண்டு பின் தனது UPI டைப் செய்து உள்ளார்.

ஆனால் நடந்தது வேறு அந்த மோசடி நபர் அனுப்பிய பேமெண்ட்  ரெக்வெஸ்ட்.

UPI  பின் அடித்தவுடன் இந்த பெண்ணின் கணக்கிலிருந்து 50.000/- ரூபாய் Deduct ஆகியுள்ளது.

அந்தப் பெண் இதன்மூலம் ரூபாய் 50.000/- தொகையை இழந்துள்ளார்.

Theft of 50,000 money through the Internet

UPI இணையதளம்

கடந்த அக்டோபர் மாதம் மட்டும் UPI மூலம் சுமார் 7.7 லட்சம் கோடி முறை UPI தளத்தை பயன்படுத்தி மக்கள் பேமெண்ட் செய்துள்ளனர்.

இப்படி இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் இப்பொழுது UPI பயன்படுத்திவரும் ஒரு தளத்தில் இப்படி ஒரு மோசடி நடந்துள்ளது.

மிக கவனமாக இருக்க வேண்டும்

இதேபோல் பல மோசடிகள் OLX இணையதளத்தின் மூலம் மோசடிகள் செய்வதாக பல புகார் மற்றும் ஏமாந்தவர்கள் பேஸ்புக் போன்ற தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.

எனவே UPI செயலியைப் பயன்படுத்துவதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

இந்த வகை அரிசி உங்களின் வாழ்நாளை அதிகரிக்கும் ஏன் தெரிந்து கொள்ளுங்கள்.

இப்போதெல்லாம்  இணையதள திருட்டு என்பது ஒரு சாதாரணமாகிவிட்டது, அதில் பணத்தை இழந்தவர்கள் தங்களுடைய பணத்தை திரும்ப பெற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

small new profitable business ideas 2021

இணையதளம் மூலம் பொருட்களை விற்பனை செய்வது அல்லது பொருட்களை வாங்குவது போன்ற செயல் முறை செய்யும் பொழுது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

Leave a Comment