TN best Marriage assistance scheme 2022
ஆதரவற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூ 50,000 நிதி உதவி..!
ஆதரவற்ற பெண்களுக்கு திருமண நிதி உதவியாக 50,000 ரூபாயும் 8 கிராம் தங்கமும் வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு இப்போது செயல்படுத்த தொடங்கியுள்ளது.
திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது அதில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் அன்னை தெரசா நினைவு திருமண உதவி பெறும் திட்டம்.
பெற்றோர்களால் கைவிடப்பட்ட அல்லது பெற்றோர்களை இழந்து மிகவும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள ஏழை எளிய பெண்களுக்கு.
திருமணம் செய்து வைக்க உதவுவதற்காக தமிழக அரசு இந்த திட்டத்தை இப்பொழுது செயல்படுத்த தொடங்கியுள்ளது.
ரூபாய் 50,000/- நிதி உதவி
12ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்து அல்லது டிப்ளமோ படித்த பெண்களுக்கு ரூபாய் 50,000/-நிதி உதவித் தொகையும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படும் இந்த திட்டம் மூலம்.
8 கிராம் தங்கம்
இந்த திட்டத்தின் கீழ் பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவியுடன் தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.
ரூபாய் 25,000/- நிதி உதவி
TN best Marriage assistance scheme 2022 இந்தத் திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு அல்லது படிப்பறிவில்லாத திருமணமாகும் பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூபாய் 25,000/- மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.
இதற்கான தகுதி என்ன
மணமகள் 18 வயதை கட்டாயம் பூர்த்தி செய்திருக்க வேண்டும் அதேபோல் மணமகனுக்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும் அப்போதுதான் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.
விண்ணப்பிக்க வேண்டிய கால நாட்கள்
TN best Marriage assistance scheme 2022 திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பு இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆதார் கார்டு 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்வி மாற்று சான்றிதழ், திருமண அழைப்பிதழ் நகல்.
விண்ணப்பதாரரின் புகைப்படம், ஆதரவற்றோர் என்பதற்கான தமிழக அரசு வழங்கிய சான்று.
பெற்றோரின் இறப்பு சான்றிதழ் ஆகியவை தேவைப்படும், இந்த ஆவணங்களை வைத்து நீங்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.