8th வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் 50,000 சம்பளத்தில் சென்னையில் தமிழ்நாடு அரசு வேலை.(TN Chennai notification 2020 Quick apply ).
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது குறைந்தபட்ச கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் 5/11/2020 முதல் 30/11/2020 வரை இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மொத்த காலிப்பணியிடங்கள் 23 கல்வித் தகுதி, சம்பள விவரம், விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் மூலம்.
நிர்வாகம்: சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கம்
மேலாண்மை: தமிழ்நாடு அரசு
விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 05/11/2020
கடைசி நாள்: 30/11/2020
சம்பள விவரம்: 15,700 – 50,000
மொத்த காலி பணியிடங்கள்: 23
வேலை இடம்: சென்னை
சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கம் முழு விவரங்கள்.
சென்னையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தில் அலுவலக உதவி பணியாளர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மொத்த காலியிடங்கள் 23.
கல்வித்தகுதி.
இந்த பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 8th வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று தமிழக அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வயது வரம்பு.
01/07/2020 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
பொதுப் பிரிவு 30 வயதுக்குள்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பு ,பிற்படுத்தப்பட்ட வகுப்பு (முஸ்லிம்) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர் (BC,MBC,BC(M)). பிரிவு விண்ணப்பதாரர்கள் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவை (அனைத்து வகுப்பினர்) 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
முன்னாள் ராணுவத்தினர் – ஆதிதிராவிடர் ,பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆகிய விண்ணப்பதாரர்கள் 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.
முன்னாள் ராணுவத்தினர் – ஆதிதிராவிடர் ,பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லாதோர் Other Than (SC,/ST/BC) 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் வயது உச்சவரம்பு கூடுதலாக 10 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் பணியிடங்களுக்கான இட ஒதிக்கீடு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் காணலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் 2020
தேர்வு செய்யும் முறை.
எழுத்துத் தேர்வு, நேர்காணல், மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சம்பள விவரம்.
ரூபாய் 15,7000 முதல் 50,000 வரை என்ற சம்பள ஏற்ற முறையில் தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன்.
பாலின் விலை ஒரு லிட்டர் இந்தியாவில் 7000 ரூபாய் அளவிற்கு விற்கப்படுகிறது விற்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை.
இந்த பணியிடங்களுக்கு tnrd.gov.in என்ற இணையதளம் மூலம் 30/11/2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். காலதாமதமாக விண்ணப்பிக்க கூடிய நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இணையதளம் மூலம் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்ற முழு விவரங்களையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.twitter