தமிழ்நாடு அரசு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள்.(TN corona Special Prevention Measures 2021.)
தமிழ்நாடு அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பரவாயில்லை என்று நீதிபதி வழக்கை அடுத்த வாரம் ஒத்திவைத்துள்ளார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார் அதில் இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவிவருகிறது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மத்திய அரசின் உத்தரவின் பேரில் போடப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு 135 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது ஆனால் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன்பெற முடியாத நிலையில் உள்ளது.
ஏனென்றால் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பு ஊசிகள் போடப்படும் ஆனால் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசிகள் போடப்படுவதில்லை இதனால் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி கிடைப்பது சாத்தியமில்லாமல் போகலாம் என்று தெரிவித்தார்.
எனவே போர்க்கால அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தனியார் மருத்துவமனைகளில் போடப்படும் தடுப்பூசி விலை நிர்ணயம் செய்து உத்தரவுகளை வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுகிறது மேலும் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுப்பது பெரும்பாலும் பாதிப்புகளை குறைத்துள்ளது மேலும் உயிரிழப்பு என்பது குறைந்த அளவில் உள்ளது என்று நீதிபதிகள் கூறினார்கள்.
பின்னர் இந்த வழக்கை வருகின்ற ஜூன் மாதத்தின் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இருக்கும் சிறப்பான மருத்துவ உள்கட்டமைப்பு 90% மக்களை இப்போது பாதுகாத்து வருகிறது.
தமிழ்நாட்டில் 2020 ஆம் ஆண்டு வரை 23 மருத்துவக்கல்லூரிகள் உள்ளது மேலும் மாவட்டம்தோறும் இருக்கும் அரசு மருத்துவமனைகள், சித்த மருத்துவம் கொரோனா வைரஸ் காலத்தில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்துயுள்ளது.
தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கைகள் மூலம் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்பது இதுவரை இல்லாமல் இருக்கிறது மேலும் வருகின்ற காலங்களில் 12 ஆயிரத்து அதிகமான படுக்கை அறை கொண்ட மருத்துவமனைகள் மற்றும் ஆக்ஸிஜன் வசதிகள் உள்ளிட்டவை போர்க்கள அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும் சிறந்த உணவுகள்.
சிறப்பான மருத்துவ உள்கட்டமைப்பு இருப்பதால் மட்டுமே இந்தியாவில் தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளின் மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி உள்ளது.
TN govt Education Department New orders 2021
வருகின்ற மே மாதம் 2 தேதி தமிழ்நாட்டில் புதிய அரசு அமைய உள்ளது மேலும் மத்திய அரசு வழிகாட்டுதலின் படி கொரோனா நோய் தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதற்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளது.