தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்று முதல்வராக பதவி ஏற்கும் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பார்கள்.( Tn govt announcement new covid-19 lockdown)
இந்தியாவில் கொரோன வைரஸ்ன் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு. கொரோனவைரஸல் ஏற்பட்ட மரபணு மாற்றம் காரணமாக ஒரு நாளைக்கு இந்தியாவில் குறைந்தது 4 லட்சம் பேர் இந்த கொரோன நோய் தொற்றுக்கு பாதிக்கப்படுகிறார்கள்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 8000 நபர்கள் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் ஆனால் இந்த ஆண்டு ஒரு நாளைக்கு 21 ஆயிரம் நபர்களை கடந்து செல்கிறது.
கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் சிறப்பாக உள்ளது.
ஏனெனில் கர்நாடகா, கேரளா, டெல்லி, குஜராத், உத்தரபிரதேசம், ஆகிய மாநிலங்களில் ஒரு நாளைக்கு குறைந்தது 35 ஆயிரம் நபர்களுக்கு இந்த கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது.
மரணம் என்பது மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மிகவும் குறைவு ஆனால் இதனை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று தமிழ்நாடு மருத்துவ சங்கத் தலைவர் செந்தில் முழு ஊரடங்கு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் நோயாளிகளை கவனிப்பதற்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் அமர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் பற்றாக்குறை உள்ளதால் அவர்களுடைய பங்களிப்பு மிகவும் குறைந்து விட்டது. இதனை கருத்தில் கொண்டு முழு ஊரடங்கு அமல்படுத்தினால் அந்த கால இடைவெளியில் தேவையான ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயார்படுத்தமுடியாம் முடியும் என தெரிவித்துள்ளார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கும் என்பதை பொருத்து வரும் காலங்களில் கொரோனா வைரஸை தமிழகத்திற்கு கட்டுப்படுத்த முடியும் என்பது தெரியவரும்.
வைரஸ் கட்டுப்படுத்த ஒரே ஒரு ஆயுதம் என்பது முழு ஊரடங்கு மட்டுமே என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மற்றும் அமெரிக்காவின் தொற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் உடனடியாக இந்தியாவில் பொது முடக்கத்தை அமல்படுத்துங்கள் என தெரிவித்தார்கள்
இப்படி எல்லா பக்கமும் இருந்து உடனடியாக பொது முடக்கத்தை அமல்படுத்துங்கள் என்ற ஒரு கோரிக்கையை மட்டும் வலுப்பெறுகிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் உயிரிழப்பு என்பது 144.
சைவ உணவு உண்பவர்கள் தங்கள் உணவில் எவ்வாறு அதிக புரதத்தை சேர்க்க முடியும்.
நாளுக்கு நாள் நோய்த்தொற்று எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது இதே நிலையில் சென்றால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி, மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என மிகப்பெரிய சவால்கள் தமிழக அரசுக்கு ஏற்படும் இதனை கருத்தில் கொண்டுதான் மருத்துவ வல்லுநர்கள் உடனடியாக பொது முடக்கத்தை 14 நாட்களுக்கு அமல்படுத்துதல் என்று தெரிவிக்கிறார்கள்.
central govt covid-19 report about vaccine