தமிழ்நாடு கல்வித்துறை பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய அறிவிப்புகளை தெரிவித்துள்ளது.(TN govt Education Department New orders 2021).
தமிழ்நாடு கல்வித்துறை பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய அறிவிப்புகளை தெரிவித்துள்ளது.( TN govt Education Department New orders 2021).
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப் பட்டுள்ள நிலையில். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக பரவி உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் பல மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இப்பொழுது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தேர்வு அட்டவணைகள் வெளியிடப்படும்.

மீண்டும் தேர்வு நடத்த கல்வித்துறை முடிவு செய்தாள் தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பு தேர்வு அட்டவணைகள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு கல்வித்துறை தெரிவித்துள்ளது
மேலும் பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை நடத்த கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறை தீவிர கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது இதனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது மேலும் இதனை தடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி என்ற நோக்கத்துடன் செயல்படும் இதனால் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ள கால இடைவெளியில் சுமாராகப் படிக்கும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வகுப்புகள் எடுப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று அரசு வகுப்புகளை நடத்தக்கூடாது என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
Madras High Court New Recruitment 2021
பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள், நிகழ்ச்சிகள் 100% மதிப்பெண் பெற வேண்டும் என்று குறிப்பிட்ட மாணவர்களை தேர்வு செய்து டியூஷன் உள்ளிட்ட எந்த வகுப்புகளையும் இணையதளம் மற்றும் நேரடியாகவோ நடத்தக் கூடாது என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதனை கடைபிடிக்காத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.