தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் அட்டை பெறுவது எப்படி? Tn govt new Medical Insurance Plan Card 2021.
புதிய முதல்வராக பொறுப்பேற்ற இருக்கும் திரு மு க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட ஒரு அறிக்கை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது அதுதான் இந்த கொரோனா பேரிடர் காலத்திலும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய அனைத்து செலவுகளையும் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என்ற செய்தி.
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேர்ந்து மருத்துவ சிகிச்சை பயனடைய அதன் காப்பீட்டு அட்டை எப்படி பெறுவது என்று இங்கே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
காப்பீட்டு அட்டை விவரங்கள்.

ஆயுஷ்மான் என்ற திட்டத்தை தமிழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி மத்திய மற்றும் மாநில அரசின் ஒருங்கிணைப்புடன் உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் தான் தமிழக அரசின் முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டம்.
அதன்படி தமிழகத்தில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் உச்சவரம்பு 2 லட்சம் ரூபாயாக இருந்தது பின்பு மத்திய அரசின் ஒருங்கிணைப்பாள் இதன் உச்சவரம்பு தற்போது 5 லட்சம் ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பினால் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
ஒருவர் காப்பீட்டு திட்டத்தில் பயனடைய விரும்பினால் அவருடைய ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய் இருக்க வேண்டும் அதாவது ஒரு மாதத்திற்கு அவருடைய வருமானம் ரூபாய் 6000 என இந்த தகுதி உடையவர்கள் அவர்கள் வசிக்கும் இடத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் தங்களுடைய வருமான வரித்துறை சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.
கிராம நிர்வாக அதிகாரியிடம் வருமானவரித்துறை சான்றிதழ்கள் பெற ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, போன்ற ஆவணங்கள் தேவைப்படும் இந்த அனைத்து ஆவணங்களையும் உங்களுடைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களை சமர்பித்த பின்பு உங்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படும் தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் தமிழகத்திலுள்ள 242 அரசு மருத்துவமனைகளிலும் 707 தனியார் மருத்துவ மனைகளிலும் செயல்படும்.
இந்த நோய்களுக்கு காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம்.

சிறுநீரக செயலிழப்புக்கு டயாலிசிஸ் சிகிச்சை, இருதய அடைப்பு நோய் சிகிச்சை, காது கேட்கும் கருவி பொருத்துதல், எலும்பு முறிவு சிகிச்சை, புற்றுநோய் கீமோதெரபி சிகிச்சை, கல்லீரல் சிகிச்சை, நிமோனியா போன்ற அதிதீவிர நோய்களுக்கும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.
எச்சரிக்கை குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தவறாமல் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த திட்டத்தில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அவற்றை புகார் மூலம் தெரிவிக்க 1800 425 3993 என்ற எண்ணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது குறிப்பாக இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.