TN power finance fixed scheme big details 2022
வங்கியை விட அதிக வட்டிதரும் தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம்..!
வணக்கம் நண்பர்களே நம்மளுடைய தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் இத்திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால் அனைவரும் பயனடையலாம்.
குறுகிய காலத்தில் நமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் நீண்டகாலத்திற்கு நமது வாழ்க்கை மகிழ்ச்சியாகவும்.
எப்பொழுது பொருளாதாரம் சிறப்பாக இருக்கவும், சேமிப்பு என்பது மிக மிக முக்கியமாக இருக்கிறது, அனைவரின் வாழ்க்கையிலும்.
நாம் குறைந்த காலத்தில் முதலீடு செய்யும் தொகை வட்டியுடன் நமக்கு திரும்பி கிடைக்க வேண்டும் என்று அனைவரும் நினைப்போம்.
அப்போது நமக்கு நினைவுக்கு வருவது என்னவென்றால் நிலையான வைப்பு நிதி திட்டம் Fixed Deposit மற்றும் அஞ்சலகங்கள் தான் Post Office,முதலில் அனைவருக்கும் நினைவில் தோன்றும்.
நீங்கள் ஒரு சிறந்த முதலீட்டாளராக மாற வேண்டும் என்று நினைத்தால், உங்களுக்கு TN Power Finance Fixed Deposit திட்டம் மிகவும் எப்பொழுதும் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் (TN Power Finance Organisation) தமிழ்நாடு அரசால் முழுக்க முழுக்க நிர்வகிக்கப்படும் ஒரு நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் சுமார் 27,000/- கோடிக்குமேல் தொகையை தன்வசம் வைத்து நிர்வாகம் செய்கிறது.
இந்த திட்டமானது RBI வங்கியால் அங்கீகரிக்கப்பட்டு NBFC நிறுவனங்களில் செயல்படுத்தப்படுகிறது.
கால அளவுகள் என்ன
இந்த தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் முதலீட்டு திட்டத்தின் காலஅவகாசம் குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது.
இரண்டு வகையான திட்டங்கள் உள்ளன
இந்த திட்டமானது இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு மக்களுக்காக நடைமுறை செய்யப்பட்டுள்ளது.
Regular Interest Payment Scheme மற்றொன்று Cumulative Interest Payment Scheme.
Regular Interest Payment Scheme என்பது முதல் வகை இவற்றில் உங்களின் முதலீட்டுத் தொகையின் வட்டியை மாதம் மாதம் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறை பெற வேண்டுமென்று நினைத்தால் இதனை தேர்வு செய்து இந்த திட்டத்தில் முதலீடு செய்துகொள்ளலாம்.
இதன் மூலம் உங்களுக்கு மாதம் மாதம் வட்டி தொகை கட்டாயம் கிடைக்கும்.
Cumulative Interest Payment Scheme, என்பது இரண்டாவது வகையாகும் இவற்றில் உங்களின் முதலீட்டுத் தொகையின் வட்டியை உங்களுடைய முதிர்வு காலம் முடியும் பொழுது அசலும் வட்டியுடன் பெறவேண்டும்.
என்று நீங்கள் நினைத்தால் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம், இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்றால் இதில் அதிகமான தொகை கிடைக்கும்.
யாரெல்லாம் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்?
சாதாரணமாக அனைத்து இந்திய குடிமக்களுக்கும் இந்த திட்டத்தில் 5 ஆண்டுகள் வரை முதலீடு செய்து கொள்ள முடியும், அதேபோல் நீங்கள் ஒரு NRI இருந்தால் இந்த திட்டத்தில் 3 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம்.
இதில் கணக்கு தொடங்குவது எப்படி
TN power finance fixed முன்பெல்லாம் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்க வேண்டும் என்றால் நேரடியாக அந்த நிறுவனத்திற்கு சென்று அங்கு விண்ணப்பங்களை பெற்று அதன் பின்பு விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டியதாக இருந்தது.
இப்போது தொழில்நுட்ப மாற்றங்களால் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து.
தங்கள் எவ்வளவு ரூபாய்க்கு கணக்கு தொடங்குகிறீர்கள் அந்த தொகைக்கு DD எடுத்து தபால் மூலம் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
இந்தத் திட்டத்தில் இணையதள வசதிகளும் இப்பொழுது செயல்படுத்தப்பட்டு உள்ளன.
எனவே நீங்கள் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்க வேண்டும் என்றால் எப்பொழுது வேண்டுமானாலும் இணையதளம் மூலம் உங்கள் வீட்டில் இருந்தபடியே.
உங்களுடைய கைபேசி அல்லது மடிக்கணினி மூலம் www.TNPowerFinance.com இணையதள முகவரிக்கு சென்று கணக்கை தொடங்கி கொள்ளுங்கள்.