Tneb aadhaar link last date best tips 2023
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு 3 நாட்கள் அவகாசம் தீவிர களப்பணியில் மின்துறை ஊழியர்கள்..!
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வரும் 15ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இனிமேல் நீடிக்க வாய்ப்பில்லை என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளார்கள்.
Tneb aadhaar link last date best tips 2023 மூன்று நாட்கள் அவகாசம் இருப்பதால் அதற்குள் 100 சதவீத நுகர்வோர் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்ற இலக்குடன் மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன, இது தவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன.
மின் நுகர்வோர்கள் தங்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியது கடந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது.
தயங்கும் பொதுமக்கள் என்ன காரணம்
Tneb aadhaar link last date best tips 2023 தொடர்ந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது ஆதார் எண்ணை இணைத்தல் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்ற அச்சம் மக்களிடத்தில் நிலவியதால்.
மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு தொடக்கத்தில் மக்கள் தயக்கம் காட்டினார்கள்.
எனினும் ஆதார் எண்ணை இனைப்பதால் இலவச மின்சாரத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று மின்சாரவாரியம் உறுதி அளித்தது.
சிறப்பு முகாம்கள் மூலம் இணைப்பு
Tneb aadhaar link last date best tips 2023 ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகளை துரிதப்படுத்தி தமிழக அரசு அதற்கு சிறப்பு முகாம்கள் மின்சார வாரிய அலுவலகங்களில் அமைக்கப்பட்டது.
பண்டிகை நாட்கள் தவிர ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இணையதளம் மூலமாகவும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வசதியை மின்சாரவாரியம் செய்து கொடுத்திருந்தது, இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் என்றும் கூறப்பட்டிருந்தது.
பிப்ரவரி 15ஆம் தேதி கடைசி
அதிகப்படியான மக்கள் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்காததால்,இதற்கான கால அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார் ஒரு மாத காலம் அவகாசம் சேர்த்து பிறகு தமிழ்நாடு முழுவதும் சுமார் 40 லட்சம் மின் நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருக்கிறார்கள்.
இதனால் மீண்டும் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்தது,அதாவது பிப்ரவரி 15ஆம் தேதி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.