TNPSC Group 5 exam date announced useful
டிஎன்பிஎஸ்சி குரூப் 5 ஏ தேர்வு எழுதும் நபர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது..!
டிஎன்பிஎஸ்சி குரூப் 5 ஏ தேர்வு வருகின்ற 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் தேர்வு நடைபெறும் மாதம் டிசம்பர் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஆண்டுதோறும் நிரப்பப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் இதற்கான கால அட்டவணையை வெளியிடும் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 குரூப்-2 ,2 ஏ குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகளை தமிழ்நாட்டில் நடத்துகிறது.
மொத்த காலி பணியிடங்கள் எத்தனை
அரசு வேலை என்பது இன்றைய இளைஞர்களின் ஒரு கனவாக இருக்கிறது டிஎன்பிஎஸ்சி நடத்தும் இத்தகைய தேர்வுகளுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பிக்கிறார்.
அண்மையில் நடந்த குரூப்-4 தேர்வுக்கு சுமார் 21 லட்சம் நபர்கள் விண்ணப்பித்து 20 லட்சம் நபர்கள் தேர்வு எழுதினார்கள்.
இது தமிழ்நாட்டில் திருவிழா கூட்டம் போல இருந்தது இந்த நிலையில் தலைமை செயலகத்தில் பிரிவு அலுவலர் உதவியாளர் உள்ளிட்ட பிரிவுகளில்.
காலியாக உள்ள 161 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 5ஏ,ஏ தேர்வு நடத்தப்படும் என்று கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.
எந்தப் பிரிவுகளில் பணிக்கு அமர்த்தப்படும்
சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் சட்டம் மற்றும் நிதி சாராத உதவி அலுவலர் பதவிக்கு 74 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நிதிப்பிரிவு உதவி அலுவலர் பணியிடங்களுக்கு 29 காலி பணியிடங்களும் உள்ளன.
சட்டம் மற்றும் நிதி சாராத உதவியாளர் பதவிக்கு 49 காலி பணியிடங்களும்.
நிதி உதவியாளர் பதவிக்கு 9 காலி பணியிடங்களையும் நிரப்ப டிஎன்பிஎஸ்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
இந்த பணியிடங்களுக்கு அந்தந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட விவரங்களும் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.
சம்பளத் தொகை எவ்வளவு
TNPSC Group 5 exam date announced useful தலைமை செயலகத்தில் நிதி சாராத பிரிவு உதவி அலுவலர் மற்றும் நிதிப்பிரிவு உதவி அலுவலர் பணிக்கு ஊதியமாக குறைந்தபட்சம் 36,400 முதல் அதிகபட்சம் 134,200 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நிதி மற்றும் நிதி சாராத உதவியாளர் பணியிடத்திற்கு, நிதி உதவியாளர் பணியிடத்திற்கு, குறைந்தபட்சம் 20,000/-முதல் அதிகபட்சம் 73,700/-என்ற அளவில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி
TNPSC Group 5 exam date announced useful இந்தத் தேர்வு அறிவிப்பானது வெளியானது முதல் தேர்வாளர்கள் அதிக அளவில் விண்ணப்பித்து வருகிறார்கள்.
வருகின்ற 21ம் தேதி இதற்கு கடைசிநாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 18ஆம் தேதி தேர்வு நடைபெறும் காலை மாலை என இருவேளைகளிலும் தேர்வு நடைபெறும் காலை சரியாக 9:30 மணிக்கு முதல் 12:30 வரை 100 மதிப்பெண்களுக்கு.
பொதுத்தமிழ் தேர்வுக்கு மதியம் 2:30 மணி முதல் 5:30 மணி வரை 100 மதிப்பெண்களும் பொது ஆங்கிலம் தாளுக்கும் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்
TNPSC Group 5 exam date announced useful தேர்வு முடிவுகள் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது, தேர்வு தொடர்பான முழு விவரங்களையும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.