Today 2 persons Killed in Coimbatore
பயங்கரம் நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை கோவையில் பரபரப்பு சம்பவம் பழிக்குப்பழி..!
திமுக என்ற நச்சு எப்பொழுதெல்லாம் தமிழகத்தை ஆட்சி செய்கிறது அப்போதெல்லாம் போதைப்பொருள், ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், நிலம் கையாடல், போன்ற பல்வேறு குற்றச்செயல்கள் சாதாரணமாக நடக்கிறது.
நிர்வாக திறமையற்ற திமுக அரசால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க முடியவில்லை என்பது வெளிப்படையான ஒரு விஷயம், இதற்கு எடுத்துக்காட்டாக நீதிமன்ற வளாகத்தில் கொலை நடப்பது.
Today 2 persons Killed in Coimbatore கொலை செய்யப்பட்ட கோகுல் தனது உடைக்குள் ஒரு கத்தியை மறைத்து வைத்திருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களை கொலை செய்ய சிலர் முயற்சிப்பதாக கோகுலுக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருக்க கூடும் என காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.
கோவையில் நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த துணிகர கொலை சம்பவம் கோவை மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவை போன்ற மிகச் சிறந்த தொழில் நகரத்தை கண்டுகொள்வதில்லை கோவையை திமுக முற்றிலும் புறக்கணிக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவையை மையமாக வைத்து பல்வேறு குற்றச்செயல்கள் நடக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.
Today 2 persons Killed in Coimbatore இந்தநிலையில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.
நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நண்பர்கள்
கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் கோகுல், சிவானந்தா காலனி சேர்ந்தவர் மனோஜ், இவர்கள் இருவரும் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
Today 2 persons Killed in Coimbatore ஒரு வழக்கில் ஆஜராவதற்காக அவர்கள் இருவரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு இன்று காலை வந்தார்கள், தங்கள் வழக்கு விசாரணைக்காக காத்திருந்தவர்கள், சிறிது நேரம் கழித்து நீதிமன்றத்திற்கு பின்புறம் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றார்கள்.
மறைந்திருந்து தாக்கிய கும்பல்
அப்போதும் யாரும் எதிர்பார்க்காத விதமாக அவர்களை நோக்கி பாய்ந்த 5 நபர்கள் கொண்ட கும்பல் கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு அவர்களை சரமாரியாக வெட்டினார்கள்.
இதனால் பயந்து போன இருவரும் உயிரை காப்பாற்ற அங்கிருந்து ஓடினார்கள் ஆனாலும் விடாத அந்த கும்பல் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே அவர்களை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டினார்கள்.
இந்த பயங்கர சம்பவத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார்கள்.
ஓட ஓட விரட்டி கொலை
இந்த சம்பவத்தில் கோகுல் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்தார் இது குறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அங்கு வந்து கோகுலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
இருவரையும் வெட்டிய கும்பல் மிகவும் சர்வ சாதாரணமாக அங்கிருந்து நடந்து சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.