Top 10 best districts export in tamilnadu
தமிழகத்தில் ஏற்றுமதியில் முதல் 10 சிறந்த மாவட்டங்கள்..!
தமிழக ஏற்றுமதி வர்த்தகத்தில் முதல் சிறந்த 10 மாவட்டங்கள் இப்பொழுது வரிசை இடப்பட்டுள்ளது, காஞ்சிபுரம் முதலிடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்திற்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது, நாட்டின் ஒட்டுமொத்த பொருட்கள் ஏற்றுமதியில் குஜராத் முதலிடமும் மகாராஷ்டிரா இரண்டாம் இடமும்,மற்றும் தமிழகம் மூன்றாம் இடமும் பிடித்துள்ளது.
ஏற்றுமதி விவரங்கள்
கடந்த 2019- 2020 ஆம் நிதியாண்டில் 2.12 லட்சம் கோடி ரூபாயாக இருந்த தமிழகத்தின் மொத்த பொருள் ஏற்றுமதி 2020 -2021 ஆம் ஆண்டு நிதியாண்டில் கொரோனா வைரஸ் காரணமாக 1.92 லட்சம் கோடி ரூபாயாக சரிவை சந்தித்தது.
தற்போது மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியுள்ளது 2021-2022 ஆம் நிதியாண்டில் 2.62 லட்சம் கோடி ரூபாயாக சிறப்பான புதிய வளர்ச்சியை கண்டுள்ளது.
தமிழகத்தில் முதல் சிறந்த 10 மாவட்டங்கள்
Top 10 best districts export in tamilnadu மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் 2021- 2022ஆம் நிதியாண்டுக்கான ஏற்றுமதி வர்த்தக புள்ளிவிவரப்படி தமிழகத்தில் 10 மாவட்டங்கள் ஏற்றுமதி வர்த்தகத்தில் முன்னிலையில் உள்ளது.
காஞ்சிபுரம் – 73,340 கோடி ரூபாய்
சென்னை – 41,714 கோடி ரூபாய்
திருப்பூர் – 35,834 கோடி ரூபாய்
கோவை – 23,654 கோடி ரூபாய்
கிருஷ்ணகிரி – 16,826 கோடி ரூபாய்
திருவள்ளூர் – 16,003 கோடி ரூபாய்
வேலூர் – 7,558 கோடி ரூபாய்
கரூர் – 7,513 கோடி ரூபாய்
தூத்துக்குடி – 6,623 கோடி ரூபாய்
ஈரோடு – 4,204 கோடி ரூபாய்
இந்த 10 மாவட்டங்களில் மட்டும் 2.33 லட்சம் கோடி ரூபாய் அளவிலான மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளனர், தமிழகத்தில் மொத்த ஏற்றுமதியில் 10 மாவட்டங்களில் பங்களிப்பு 88 சதவீதம் அளவில் உள்ளது.
மத்திய அரசு புதிய சாதனை
Top 10 best districts export in tamilnadu கடந்து 2021 – 2022 நிதியாண்டில் மத்திய அரசு இதுவரை இல்லாத அளவிற்கு 40 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்து புதிய சாதனையை படைத்துள்ளது, இது நிர்ணயிக்கப்பட்ட நாட்களுக்கு முன்னதாகவே நிறைவேற்றப்பட்டது.
ஏற்றுமதியை பல மடங்கு அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது மாநில அரசும் ஏற்றுமதி செய்யும் நபர்களுக்கு பல்வேறு விதமான சலுகைகள்.
தொழில்முறை பயிற்சிகள், கையேடுகள், குறிப்புகள், போன்றவற்றை செய்து கொடுக்கிறது,இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி அதிகமாவதால் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளது.