சர்க்கரை நோயின் அபாயகரமான ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகள்.(top 5 signs of diabetes in Tamil )
இந்த உலகில் இருக்கும் நோய் தொற்றுகளில் முதன்மையாக இருப்பது கொரோனா வைரஸ் ஆனால் எப்பொழுதும் அதிக மக்களை பாதிக்கக்கூடிய ஒரு நோய் உள்ளது எனில் அது நீரிழிவு நோய் எனப்படும் சக்கரை நோய் தான்.
இந்தியா உலகில் இரண்டாம் இடத்தில் உள்ளது உலக சுகாதார அமைப்பு இந்த நாள்பட்ட நோய் லட்சக்கணக்கான மக்களை பாதித்துள்ளதாக கூறுகிறது மேலும் வரும் காலங்களில் இந்த நோய்க்கு அதிக மக்கள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மனித உடலானது வித்தியாசமான ஆச்சரியங்கள் நிறைந்த உடலாக உள்ளது இதனால் எந்த ஒரு நோய் தொற்று ஏற்பட்டாலும் அதனுடைய அறிகுறிகளை வேகமாக அல்லது மெதுவாக காண்பிக்கிறது.
ஒவ்வொரு நோய்தொற்றுக்கு ஏற்றாற்போல் அதனுடைய அறிகுறிகள் மனித உடலில் தென்படும்.
சர்க்கரை நோயின் வகைகள்.
சர்க்கரை நோயில் இரண்டு வகை உள்ளது ஒன்று டைப் 1 சர்க்கரை நோய் மற்றும் டைப் 2 சர்க்கரை நோய். இரண்டு வகையான நீரிழிவு நோய்களும் நாள்பட்ட உயர் ரத்த அழுத்த சர்க்கரை அளவிற்கு வழிவகுக்கும்.
நமது உடலுக்கு தேவையான சக்தியைக் கொடுப்பது குளுக்கோஸ் இந்த குளுகோஸை செல்கள் மூலம் உடலுக்குள் கொண்டு செல்ல உதவுவது இன்சுலின் டைப் 2 சர்க்கரை நோயில் இந்த இன்சுலின் குறைவாக இருப்பதால் இந்த செயல்பாடு பாதிக்கப்பட்டு உடலில் ஒழுங்கு முறையற்ற சர்க்கரை அளவிற்கு வழிவகுக்கிறது.
டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்.
டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் உள்ளன அவைகள்.
மரபணுக்கள்
உடல் பருமன்
உடலில் இன்சுலின் எதிர்ப்பு
போதுமான உடல் உழைப்பு இல்லாமை.
டைப் 2 சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன.
அடிக்கடி பசி ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு போதிய அளவில் இல்லாமல் இருக்கும் பொழுது உணவில் இருக்கும் குளுக்கோஸை உடல் தனது செயல்பாட்டிற்காக எடுத்துக்கொள்ளும் இதனால் அடிக்கடி பசி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி பசி உணர்வு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
தாகம் போன்ற உணர்வு ஏற்பட்டு கொண்டே இருக்கும்.
உடலில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும் பொழுது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் இதனால் உடலில் ஆரோக்கியமான நீர்ச்சத்தை இழக்க வேண்டிய சூழ்நிலை நடக்கலாம்.
இதன் விளைவாக உங்களுக்கு அதிக தாகம் ஏற்படும் இதற்கு சரியான நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்காமல் இருந்தால் உடலில் நீர் இழப்புக்கு வழிவகுக்கும்.
உடல் சோர்வடைதல்.
உடல் அடிக்கடி சோர்வடைய தொடங்கினாள் நமது அன்றாட பணிகளை செய்ய முடியாத சூழ்நிலைகள் ஏற்படும் உடலில் சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும் பொழுது. இது டைப் 2 சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள்.
Best 5 ideas how to improve financial status
கண் பார்வையில் ஏற்படும் குறைபாடுகள்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் பொதுவான ஒரு அறிகுறி என்றால் அது கண் பார்வை குறைபாடு அல்லது மங்கலான பார்வை. காரணம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் கண்களில் ரத்த நாளங்கள் சேதமடையும் மங்கலான பார்வை ஏற்படும் இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் கண் பார்வை இழக்க நேரிடும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் ட்விட்டர் பக்கத்தை லைக் செய்யுங்கள்.
காயங்களால் மிகப்பெரிய ஆபத்து காத்துக்கொண்டிருக்கிறது.
உடலில் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் இது ரத்த ஓட்ட மண்டலத்தை சேதப்படுத்தும் இதனால் காயங்கள் ஏற்பட்டால் குணமாவதற்கு அதிக நாட்கள் ஆகும் மேலும் சில தொற்று நோய்களுக்கு இது வழிவகுக்கும்.
மனித உடல் ஒவ்வொரு நோய் தொற்றுக்கும் ஒவ்வொரு வகையான அறிகுறிகளை ஏற்படுத்தும் அல்லது அதற்கேற்றார் போல் செயல்படும் இதனால் பொதுவாக ஏற்படும் அறிகுறிகள் அடிக்கடி சிறுநீர் கழித்தல் கைகால் வலி தலைவலி உடல் வலி போன்றவைகள் ஏற்படும்.Join us our Telegram group