Top 5 tips in country chicken farming in tamil

Top 5 tips in country chicken farming in tamil

உங்களுக்கு ஏற்ற நாட்டுக்கோழி வளர்ப்பு அதிக லாபம் தரும் சிறு தொழில் எப்படி செய்வது..!

நாட்டுக்கோழி வளர்ப்பு என்பது பொதுவாக கிராமங்களில் வீடுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பது வழக்கம்,விற்பனை செய்வதற்காக வளர்க்காமல் தங்களின் உணவுத் தேவைக்காக கிராம மக்கள் இதனைப் பயன்படுத்துவார்கள்.

இதையே ஒரு சுய தொழிலாக செய்தால் இப்பொழுது அதிகமான லாபம் பார்க்கலாம், கிராமப்புற விவசாயிகள் விவசாய நிலம் மற்றும் வீட்டை சுற்றி, சிறிய ஷெட், அமைத்து பண்ணை முறையில் நாட்டுக்கோழி வளர்க்கலாம்.

தினசரி காலை 2 மணி நேரம், மற்றும் மாலை 3 மணி நேரம் பராமரிப்புக்கு நேரம் செலவிட்டால் போதும் நாட்டுக்கோழி குஞ்சுகளைபண்ணையில் உற்பத்தி செய்யலாம் அல்லது வெளியிலிருந்து ஆர்டர் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

முட்டையாக வாங்கி கருவிகள் மூலம் நாமே பொரிக்க செய்து குஞ்சுகளை தேவைக்கேற்ப உற்பத்தி செய்யலாம்.

முட்டையை அடைகாக்க இன்குபேட்டர் மெஷின் (ரூபாய் 2 லட்சம்) அடை காத்த முட்டைகளை பொரிக்க வைக்க கேட்சர் மெஷின் (ரூபாய் 80 ஆயிரம்) தேவைப்படும்.

புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு குறைந்த முதலீட்டில் குஞ்சுகளை வெளியில் வாங்கி வளர்ப்பது எளிதாக அமையும்.

நாட்டுக்கோழி வளர்ப்பு பொருத்தவரை பண்ணை வைக்கும் இடத்தில் வெளியிலிருந்து வரும் மற்ற பறவைகளை அண்ட விடக்கூடாது.

அந்நிய பறவைகள் மூலம்தான் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளது, பண்ணைக்கு அருகில் அதிகமான மரங்களையும் வளர்க்க கூடாது.

செடி, கொடிகள், இல்லாமல் இருப்பது கோழிகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கு நல்லதாக அமையும்.

பண்ணைகளுக்கு அருகில் அதிக சத்தம் வரும் வெடிபொருட்கள், வெடிகளை, வெடிக்காமல், பார்த்துக்கொள்ள வேண்டும்.

கோழிப்பண்ணையில் எப்போதும் பாடல்களை ஒலிக்கும்படி செய்தால் மற்ற சத்தங்கள் கோழிகளை அதிகமாக பாதிக்காது.

முதல் 48 நாட்களுக்கு புரதசத்து அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே கோழிக்குஞ்சுகளுக்கு கட்டாயம் தரவேண்டும்.

48 நாட்களுக்கு பிறகு தீவனத்துடன், கீரை, மற்றும் கரையான்களை சேர்த்துக் கொடுக்கலாம்.

எடை அதிகரிக்க குஞ்சுகளின் வளர்ச்சிக்கு ஏற்றபடி பனங்கருப்பட்டியை தண்ணீரில் கலந்து குடிக்கவேண்டும்.

கேரட், பெரிய வெங்காயம், கீரை, வாழைப்பழம், போன்றவற்றை சிறிதாக நறுக்கி தீவனத்துடன் கலந்து கொடுக்கலாம்.

45 நாட்களுக்கு மேல் கடைசி வரை ஏதாவது ஒரு கீரை வகைகளை கட்டாயம் சிறிதாக நறுக்கி மதியத்துக்கு மேல் கோழிகளுக்கு கொடுக்கலாம்.

இதனால் தீவனச்செலவு குறையும், கோழியின் கறியின் ருசியும் அதிகரிக்கும்.

கொண்டைக்கோழி, கழுகுக் கோழி, சண்டை கோழி, குரூவுக் கோழி, கருங்கல் கோழி, வகைகளை தனித்தனியே அதிக அளவில் அடையாளம் காண முடியாது, அதனால் இந்தக் கோழிகளின் வண்ணத்தை வைத்துதான் அடையாளத்தைக் காண முடியும்.

Top 5 tips in country chicken farming in tamil

நாட்டுக்கோழி அடை காக்கும் முறை

நாட்டுக் கோழிகளை முட்டைகளின் மேல் அமர வைத்து அடை காக்க வேண்டும்.

ஒரு நல்ல கூடையில் பாதி அளவு உலர்ந்த தவிடு, வைக்கோல்,மரத்தூள்,கூளம், இவற்றில் ஏதாவது ஒன்றை நிரப்பி நடுவில் சிறிதளவு குழி போல் செய்துக்கொள்ள வேண்டும்.

அதன்மேல் சேகரித்த முட்டைகளை வைக்கவேண்டும் அதிகபட்சமாக 16 முட்டைகள் வரை வைக்கலாம்.

இந்த கூடைக்குள் கோழி அமர்ந்து அடை காக்கும் அந்த நேரத்தில் நாம் அதை நெருங்கினால் எச்சரிக்கை ஒலியை கோழிகள் அதிக அளவில் எழுப்பும்.

Top 5 tips in country chicken farming in tamil

சிறுதொழில் இனப்பெருக்கம் செய்வது

நாட்டுக்கோழி வளர்ப்பு பொருத்தவரை நன்கு வளர்ந்த கோழிகள் 25 முதல் 30 வார வயதில் முட்டையிட தொடங்கி விடும்,ஒருவேளை நல்ல தீவனம் கிடைத்தால் 20 வார வயதில் கூட முட்டையிட ஆரம்பித்து விடும்.

ஆண் சேவல் 20 வாரங்களுக்கு மேல் நன்கு வளர்ந்த கொண்டையுடன் இருக்கும், அதிகாலையில் கொக்கரக்கோ என கூவுவதை வைத்து இனவிருத்திக்கு அந்த ஆண் சேவல் தயாராக உள்ளது என அறிந்து கொள்ளலாம்.

இதற்கு தேவையான முதலீடுகள்

நாட்டுக்கோழி வளர்ப்பு பொருத்தவரை ஆயிரம் கோழி குஞ்சுகள் முதலில் வாங்க வேண்டும் என முடிவு செய்தால் அதற்கு ரூபாய் 30,000/-

3.5 டன் தீவனம் ரூபாய் 70,000/-, பராமரிப்பு ரூபாய் 15,000/-, கூலி மின்கட்டணம் ரூபாய் 13,000/-, என மூன்று மாதத்திற்கு ஒருமுறை மொத்த செலவாக 1,25,000/- முதல் 1,35,000/- வரை உங்களுக்கு தேவைப்படும்.

கோழிப்பண்ணை அமைக்க வங்கிகளில் கடனுதவி பெற்றுக்கொள்ளலாம்.

நாட்டுக்கோழி தொழில் வருமானம் முறை

நாட்டுக்கோழி வளர்ப்பு பொருத்தவரை ஒரு கோழியின் சராசரி எடை 1 கிலோ 500 கிராம் வீதம், குறைந்தது 1500 கிலோ எடையுள்ள கோழிகளை விற்கலாம்.

ஒரு கிலோ சராசரியாக ரூபாய் 250 க்கு குறையாமல் விற்பனை செய்யவேண்டும், இதன்மூலம் ரூ 2.7 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

இதில் லாபம் ரூ 80,000/- சராசரியாக மாதம் லாபம் ரூ 70,000/-முதல் 85,000/- வரை லாபம் இருக்கும்.

சந்தை வாய்ப்பு முறைகள்

நீங்கள் சரியான முறையில், இயற்கையான மூலப்பொருட்களை வைத்து, நாட்டு கோழி பண்ணை வைத்தால், இறைச்சி பிரியர்கள் நேரடியாகவே பண்ணைக்கு வந்து சிறிது விலை அதிகம் என்றாலும் வாங்கி செல்வார்கள்.

தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் வைத்தால் என்ன மாற்றம் உடலில் நிகழும்.

வீட்டு தேவைகளுக்கும், வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கும், மொத்தமாக வாங்கி விடுவார்கள்.

இந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் இல்லை, அதிக லாபம் பெற வேண்டுமென்றால் இந்த தொழிலில் கண்ணை மூடிக்கொண்டு தயங்காமல் செய்ய வேண்டும், அது மட்டும் இல்லாமல் முறையாக இந்த தொழிலை நீங்கள் செய்தால் மட்டுமே லாபத்தை பார்க்க முடியும்.

முக்கிய சில குறிப்புகள்

நீங்கள் கோழி குஞ்சுகளை வாங்கும்போது அவற்றின் விலையை மட்டும் பார்க்கக் கூடாது, தரமான குஞ்சுகளா என்று பார்த்து வாங்க வேண்டும்.

குஞ்சுகளை வாங்கும்போது அவை எந்த மாதத்தில் விற்பனைக்கு வரும் என்பதை கணக்கிட வேண்டும்.

தமிழ் மாதங்களில் கார்த்திகை, புரட்டாசி, மார்கழி, தை, போன்ற மாதங்களில் கோழி விற்பனை என்பது மற்ற மாதங்களைக் காட்டிலும் குறைவாக நடக்கும் அது விரத காலம்.

small new profitable business ideas 2021

அதேபோல் ஆடி, ஐப்பசி, பங்குனி, சித்திரை,போன்ற மாதங்களில் கோழி விற்பனை என்பது அதிகமாக இருக்கும், ஏனெனில் அது பண்டிகை காலம் அது மட்டும் இல்லாமல் அசைவு காலம் என்று சொல்வார்கள்.

Leave a Comment