What is the artificial intelligence 5 benefits
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன வருங்காலத்தில் அதன் ஆதிக்கம் இந்த உலகத்தில் எப்படி இருக்கும்..!
வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நம்மளுடைய இணையதள பதிவில் எளிய மக்களை வியக்க வைக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் அதி நவீனமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது.
உலகமே இன்று வாய் ஓயாமல் மிகவும் எதிர்பார்த்து பேசிக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் செயற்கை நுண்ணறிவு பற்றி தான்.
இந்த கட்டுரையில் செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன, செயற்கை நுண்ணறிவு தீமைகள், பயன்கள், செயற்கை நுண்ணறிவு வகைகள், செயற்கை நுண்ணறிவு குறைபாடுகள், போன்ற அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்வோம்.
செயற்கை நுண்ணறிவு என்பது கணினி உலகில் அடுத்த கட்ட வளர்ச்சியை காட்டும் ஒரு நிலையாகும்.
செயற்கை நுண்ணறிவு என்பது அதாவது நுட்பமான இயந்திரங்களை உருவாக்கி மனிதர்களைப்போல செயல்பட வைக்கும் ஒரு நுணுக்கமான தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு.
இப்பொழுது நாம் அத்தகைய அறிவின் ஆரம்ப நிலைகளை பயன்படுத்த தொடங்கிவிட்டோம், உதாரணமாக பாதைகளில் போக்குவரத்து நெரிசலை துல்லியமாக அறிவிக்கும் கூகிள் நேவிகேட்டர்.
உங்கள் கட்டளைகளை செவிசாய்த்து கேட்டு விடை அளிக்கும் அலெக்சா, கூகுள் வாய்ஸ், இது போன்ற செயற்கை நுண்ணறிவு கொண்ட அம்சங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் தினந்தோறும்.
செயற்கை நுண்ணறிவின் நிலைகள்
முடிவெடுக்கும் திறன் (Ability to make decisions)
இயந்திர அனுபவம் (Mechanical experience)
இயந்திர கற்றல் (Machine learning)
இந்த செயற்கை அறிவாற்றலின் பயன்பாடுகளை அனைத்து துறைகளிலும் பயன்படுத்தலாம் உதாரணமாக தொழில்நுட்ப கார், விவசாயம், ஆட்டோமொபைல், மருத்துவம், பொறியியல், ஆசிரியர் பணி, சமையல் பணி, சப்ளையர், போன்ற.
அனைத்து துறைகளிலும் செயற்கை அறிவாற்றல் பயன்படுத்த முடியும் மற்றும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் சில இடங்களில்.
செயற்கை நுண்ணறிவின் நன்மைகள்
இந்த செயற்கை நுண்ணறிவு மனித தவறுகளை பெருமளவு குறைக்கிறது மற்றும் அதிக அளவு துல்லியத்துடன் கனகச்சிதமாக செயல்படுகிறது, இதனால் விண்வெளி ஆய்வு போன்ற பல்வேறு ஆய்வுகளில் இது அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
கடினமான பல ஆய்வுகளுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் விஞ்ஞானம் சுரங்க மற்றும் எரிபொருள் ஆய்வு செயல் முறைகளில் பயன்படுத்தலாம்.
பொதுவாக மனிதர்களாகப் பிறந்த அனைவருக்கும் இயல்பாகவே ஒருவேளை மீண்டும் மீண்டும் செய்வதாக இருந்தால் ஒருவகை சலிப்பு ஏற்பட்டு விடும்.
இருப்பினும் செயற்கை நுண்ணறிவு பொருத்தவரை மீண்டும் மீண்டும் செய்யப்படும் வேலைகளை இயந்திர நுண்ணறிவின் உதவியுடன் மேற்கொள்ளலாம்.
செயற்கை நுண்ணறிவின் அதிநவீன செயல்முறைகள்
மருத்துவர்கள் பெரும்பாலும் செயற்கை அறுவை சிகிச்சை மூலம் பயிற்சி பெற்று வருகிறார்கள், இது மூளையின் செயல்பாடுகளை உருவகப்படுத்தி, நரம்பியல் கோளாறுகளை கண்டறிவதில் பெருமளவு உதவுகிறது.
மன நோயாளிகளுக்கு மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும், இருக்க உதவுவதில் ரோபோட்டிக்ஸ் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது இன்றைய நவீன உலகத்தில்.
செயற்கை நுண்ணறிவின் பிரபலமான பயன்பாடு கதிரியக்க அறுவை சிகிச்சை அளிக்க அறுவை சிகிச்சை உடம்பில் உருவாகும் புற்றுநோய் கட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது.
How to make hair growth oil in home 2021
இது உண்மையில் சுற்றியுள்ள திசுக்களை சேதப்படுத்தாமல் சிகிச்சை செய்ய மருத்துவ உலகில் மருத்துவர்களுக்கு பெரும் உதவியாக செயற்கை நுண்ணறிவு இப்பொழுது இருக்கிறது.
பாகப்பிரிவினை சட்டம் பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்..!
இயந்திரங்களுக்கு அடிக்கடி இடைவேளையில் மற்றும் புத்துணர்ச்சி நேரங்கள் கொடுக்க வேண்டும் என்ற ஒரு விஷயம் தேவை இல்லை தொடர்ச்சியாக எவ்வளவு நாட்கள் எவ்வளவு மணி நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம்.