who is draupadi murmu useful tips 2022
கவுன்சில் டூ குடியரசுத் தலைவர் முதல் பழங்குடியினர் பெண் ஜனாதிபதி யார் இந்த திரெளபதி முர்மு?
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்டு வென்ற திரெளபதி முர்மு எந்த இடத்திலிருந்து அவர் இந்த நிலைக்கு உயர்ந்து இருக்கிறார் என்பதை முழுமையாக பார்ப்போம்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 18ஆம் தேதி நாட்டின் 15வது குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவரான திரௌபதி முர்மு பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட இவர் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
யார் இந்த திரௌபதி முர்மு?
ஒடிசா மாவட்டத்தில் கடந்த 1958 ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி இவர் பிறந்தார் கடந்த 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலின்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக இவர் பெயர் அப்போது பரிசளிக்கப்பட்டது.
ஆனால் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பாஜக தலைமை வாய்ப்பு வழங்கியது.
கவுன்சிலர் முதல் குடியரசுத் தலைவர் வரை
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள ரமாதேவி மகளிர் கல்லூரியில் பட்டம் படித்தவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
பட்டப்படிப்பை முடித்த பிறகு ஆசிரியராக பணியாற்றியவர் அதன் பின்னர் அரசு ஊழியர் ஆகவும் நீர்வளம் மற்றும் மின்சார துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார்.
பின்னர் ஒரு சாதாரண கவுன்சிலரான தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், இரண்டு முறை ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து இருக்கிறார்.
ஒடிசா மாநில அமைச்சர்
who is draupadi murmu useful tips 2022 பாஜகவை சேர்ந்த இவர் கடந்த 2000மாவது ஆண்டில் ஒடிசாவில் பாஜக தளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது அமைச்சராக பதவியேற்றார்.
ஒடிசா மாநிலத்தில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துறை அமைச்சராகவும் அதைத்தொடர்ந்து மீன்வளம் மற்றும் விலங்கு நல மேம்பாட்டு துறை அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார்.
ஜார்க்கண்ட் ஆளுநர்
who is draupadi murmu useful tips 2022 ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட அதன்மூலம் ஒடிசாவில் இருந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் மற்றும் முதல் பழங்குடியினர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்று இருக்கிறார்.
திரெளபதி முர்மு வரும் 25-ஆம் தேதி இவர் பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.